வியாழன், செப்டம்பர் 29

புதியதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால்

கடந்த ஆகஸ்ட் 2011 ல் பங்கு சந்தையில் பட்டிலிடப்பட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3/4 வீழ்ச்சியடைந்து சிறு முதலீளிட்டார்களை திவாலாக்கியுள்ளது.

ஐபிஓ எனப்படும் (initial public offer) மூலம் நிறுவனங்கள் பொதுமக்களிடம் நிதி திரட்டுகின்றன.  முன்பெல்லாம் ரூ.100 கோடி முதல் ரூ.1000 கோடி கடன் என்றால் IDBI, IFCI, IIB, ICICI,UTI, LIC, HUDCO,TDB இப்படிப்பட்ட நிறுவனங்களிடம் கடன் பெற்று வந்த நிறுவனங்கள்,  தற்போது அதாவது புதிய பொருளாதார கொள்கை அமலுக்கு வந்தவுடன், IPO மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

மேற்கண்ட நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், ஆயிரதெட்டு ஆவணங்கள், ஈட்டுறுதியாக அசையா சொத்துக்கள், தனிப்பட்ட ஈட்டுறுதி ஆகியவகளை அளிக்க வேண்டும்.   இவைகளிலிருந்து தப்பிக்கதான் இந்த IPO.

பங்கு சந்தையில் நேரடியாக இறங்க முடியுமா என்றால் அதற்கும் ஆயிரதெட்டு நடைமுறைகள்.   வட்டியில்லா கடன் என்பதால் அதை பின்பற்ற தயங்குவதில்லை நிறுவனங்கள்.  முதலீட்டாளனை பொறுத்தவரை சரியில்லை என்றால் நட்டத்திலும் விற்று விட்டு சென்று விடுவான். கேள்வி கேட்க ஆள்ளில்லை.

பங்கு மதிப்பை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அதிகமாக, பொய்யாக இட்டுகட்டி நிர்ணயம் செய்கின்றன.  பங்கு வெளியீடு பட்டியலிடப்பட்ட நான்கைந்து நாட்களுக்குள் நிறுவனங்கள் தன் பங்கில் சிலபகுதியை விற்று ரூ.1970 கோடி பார்த்துள்ளனர்.

பார்த்தீர்களா இவர்களுடைய நோக்கத்தை, நிதி திரட்டுவது என்பது நிறுவனத்தை நடத்த அல்ல.  சிறு முதலீட்டாளர்களை கொள்ளையடிக்க

இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் முடிய ரூ.5947 கோடி37 வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 35 வெளியீடுகள் மூலம் ரூ.12606 கோடி திரட்டப்பட்டது. தற்போது வெளியான 7 வெளியீடுகள் தன்மதிப்பில் 50%  மேல் இழந்து விட்டது.

அப்படிதான் நடந்துள்ளது தற்போது பங்கு வெளியிட்ட கீழ்கண்டுள்ள நிறுவனங்களின் நிலை.


ஏமாறுபவன் இருக்கும் போது ஏமாற்றிக் கொண்டிருப்பவன் புது உத்திகளை கண்டு பிடிப்பான்.  உடனடி பணக்காரன் ஆக நினைப்பவன் உள்ளதையும் இழப்பான், உயரவும் பறப்பான்


           

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...