ஞாயிறு, மார்ச் 1

இசையூற்று





என்னாசை கேளடா
  ஏதோதோ இராகம் ஏனடா
கண்ணசைவை பாரடா
  காதலினின் இராகத்தை இயற்றடா
பண்ணிசை பட்டியலில்
  பாவையிடம் நரம்பிசை அறங்கேற்று
திண்டாடி போகும்வரை
   தேகத்தில் பொங்கட்டும் இசையூற்று

மாடமாளிகை வேண்டாம்
    மச்சான் மனசுதான் வேண்டும்
காடுகழனி வேண்டாம்
    கடைசி வரை கைப்பிடித்து வரவேண்டும்
ஜாடமாடையா ஊருலகம்
     வாய்வலிக்க பேசிக் கொள்ளட்டுமே
கூடிக்களிக்க வாருமய்யா

      குதுகலம் சாமம் வரை நீளட்டுமே

கருத்துகள் இல்லை:

தடுதாட்கொள் புராணம்

  தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...