ஞாயிறு, மார்ச் 1

இசையூற்று





என்னாசை கேளடா
  ஏதோதோ இராகம் ஏனடா
கண்ணசைவை பாரடா
  காதலினின் இராகத்தை இயற்றடா
பண்ணிசை பட்டியலில்
  பாவையிடம் நரம்பிசை அறங்கேற்று
திண்டாடி போகும்வரை
   தேகத்தில் பொங்கட்டும் இசையூற்று

மாடமாளிகை வேண்டாம்
    மச்சான் மனசுதான் வேண்டும்
காடுகழனி வேண்டாம்
    கடைசி வரை கைப்பிடித்து வரவேண்டும்
ஜாடமாடையா ஊருலகம்
     வாய்வலிக்க பேசிக் கொள்ளட்டுமே
கூடிக்களிக்க வாருமய்யா

      குதுகலம் சாமம் வரை நீளட்டுமே

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...