ஞாயிறு, மார்ச் 1

இலக்கணப் பிழை






கற்றலில் கரைகண்டது
  கண்ணுற்றா கற்சிலை வடித்தா
அற்றை தினத்தில்
  அறமற்று காணிக்கை கேட்டதா
சற்றேனும் வெட்கமின்றி
   சங்கறுக்க கற்றது அருச்சுனனா
பட்டென்று வெட்டி
   படைக்கப் பெற்றவன் ஏகலைவனா

கேட்டதும் கொடுத்தவன்
   கற்றலில் சிறந்த மாணவனா
கேட்டும் கொடுக்காதவன்
   கற்பித்தலுக்கு இலக்கணம் ஆனவனா
சூட்சம வெற்றிக்கு
   சுற்றம் பார்த்தல் பிழையே
ஆட்சேபனை ஏதுமில்லை
   அசுவத்தமா ஹதமென்பதும் கலையே

கருத்துகள் இல்லை:

விழித்தெழு பெண்ணே

விழித்தெழு பெண்ணே வித்தைகள் பழகிட பழகிடும் வேளையில் பகுத்தறிவை வளர்த்திடு வளர்ந்திட்ட அறிவால் வானத்தை களமாக்கு களத்திலே சனிதனை கோளென கொண்ட...