புதன், மார்ச் 25

நலம் வாழ வேண்டுகிறேன்



கொரானவை துரத்த
கூட்டம் போடாதே

காற்றில் பரவுவதால்
கண்ட இடம் சுற்றாதே

வெளிநாட்டிலிருந்து வந்தவனை
வலுக்கட்டாயமாக பார்க்காதே

வதந்திகளை பரப்பாதே
"வாட்சப்பை" நம்பாதே

ஆகச் சிறந்த மருந்தை
ஆங்காங்கே தேடாதே

அறிவியல் அளிக்கும்வரை
அமைதியாய் கவனித்திரு

மரணத்தை தள்ளிபோட
மனிதனாய் நடந்துகொள்

ஏனெனில் பாசக்கயிறு
கொரோனாகவும் இருக்கலாம்

கருத்துகள் இல்லை:

அடையாளம்

ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...