புதன், மார்ச் 25

கடவுள்




கண்ணப்பனின் பக்தியை சோதிக்க
கண்ணில் இரத்தம் வடித்தவனே
கண்டத்தில் ஆலகாலம் நிறுத்தியவனே
என்னப்பனே எங்களுக்கு கதவடைக்காதே

உலகளந்த வாமன வடிவமே
உலகாளும் மாபலி கொரோனவை
மூன்றடி எடுத்து வைத்தே
மன்றாடும் மக்களை காப்பாற்று

பெண்ணால் பிறக்காத முருகனே
உன்னால் மடிந்தவன் சூரனே
ஆறு முகத்தில் கொரோனாவா
ஆறுகால உணவும் அரோகராவா


மகிசா சூரனல்ல - மக்களம்மா
மரணம் கொரோனாவால் வேண்டாம்மம்மா
மகேசுவரனின் வரமும் இல்லையம்மா
மலைத்தே கதவடைத்துக்  கொள்ளாதேம்மா







1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவருக்கும் நலமே உருவாகட்டும்...

விழித்தெழு பெண்ணே

விழித்தெழு பெண்ணே வித்தைகள் பழகிட பழகிடும் வேளையில் பகுத்தறிவை வளர்த்திடு வளர்ந்திட்ட அறிவால் வானத்தை களமாக்கு களத்திலே சனிதனை கோளென கொண்ட...