ஞாயிறு, மார்ச் 1

மாயக் காதல்



அடுத்தடுத்த அலைபோல
  அடியே நினைவுகள்
படுத்துறங்க பகற்கனவில்
  பாவையுன் பாவனைகள்
தடுத்தாட் கொள்ள
  தேவனும் வரவில்லை
நடந்ததை மறந்திட
  நன்நெஞ்சை வேண்டுகிறேன்

பூஞ்சோலை ஏற்காட்டில்
  பாப்புனைந்த காதையும்
தஞ்சையில் தேடிய
  தாளராக கீர்த்தனையும்
நெஞ்சில் வாராதிருக்க
  நித்தமும் வேண்டுகிறேன்
அஞ்ஞானம் போலும்
  அகலாது வாடுகிறேன்

நாளெல்லாம் பேசியது
  நேற்றோடு முடிந்தது
நானே பேசுவது
  ஞானக் கிறுக்கானது
தாளெல்லாம் தமிழானது
   நாளமும் கொதிப்பானது
மாளாத அன்பிலே
   மாயத்தை வெல்வேனோ

கருத்துகள் இல்லை:

தடுதாட்கொள் புராணம்

  தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...