ஞாயிறு, மார்ச் 1

மாயக் காதல்



அடுத்தடுத்த அலைபோல
  அடியே நினைவுகள்
படுத்துறங்க பகற்கனவில்
  பாவையுன் பாவனைகள்
தடுத்தாட் கொள்ள
  தேவனும் வரவில்லை
நடந்ததை மறந்திட
  நன்நெஞ்சை வேண்டுகிறேன்

பூஞ்சோலை ஏற்காட்டில்
  பாப்புனைந்த காதையும்
தஞ்சையில் தேடிய
  தாளராக கீர்த்தனையும்
நெஞ்சில் வாராதிருக்க
  நித்தமும் வேண்டுகிறேன்
அஞ்ஞானம் போலும்
  அகலாது வாடுகிறேன்

நாளெல்லாம் பேசியது
  நேற்றோடு முடிந்தது
நானே பேசுவது
  ஞானக் கிறுக்கானது
தாளெல்லாம் தமிழானது
   நாளமும் கொதிப்பானது
மாளாத அன்பிலே
   மாயத்தை வெல்வேனோ

கருத்துகள் இல்லை:

கிழவி

குமரனா நீ கோபத்துடன் கோமளவல்லி கேட்க சுருக்கம் விழுந்ததாவென சுறுசுறுவென கண்ணாடியை தேடினவள் பாட்டி வைத்தியத்தை பலமுறைத் தேடி பரிசீலித்துப...