சனி, மார்ச் 14

கரோனா பங்கு






15 இலட்சம் கோடிகள்
பங்கு சந்தையில் இழப்பு
கரடி கொண்டு போனதோ
மாடால் மீட்க முடியாதோ

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தில்
யாருடைய பணம்
எங்கே போனது

இரத்த வெள்ளமென
பரிசுத்த பத்திரிகைகள்
பாடம் போதிக்க
பாவம் மக்கள்

காரணங்கள்
கரோனா வைரஸ்
யெஸ் வங்கி திவால்
அரசும் பத்திரிக்கையும் வாந்தியெடுத்தவை

ஆசிய பணக்காரன் ஜாக்-மா
அம்பானியின் பட்டத்தை பறிக்க
கரோனா காரணமா
கார்ப்பரேட் ஊழல் நாடகமா

வீழ்ந்த பொருளாதாரத்தின்
நீட்சி இதுவென்றும்
வேலைவாய்ப்பு முடங்கியதின்
தொடர்ச்சி என கொள்ளடா

பங்கு ஈவுக்கு
ஏங்கி கிடப்பவர்களே
ஏப்ரலில் ஏமாற - இதுவொரு
முன்னோட்டமென புரிந்து கொள்ளடா

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...