சனி, ஏப்ரல் 4

வாலி


தம்பிக்கு நட்பாய்
தசரதப் புத்திரனாம்
தாரை உரைக்க...
தம்பியைக் கொல்லேன் - என்கிறான்

வாய்க்கால் தகராறு
வாலிக்கும் இராமனுக்கும்
வாழ்வில் ஏதடி
வேதங்கற்றவன் - யோக்கியனடி

எதிர்நின்று வீழ்த்தாது
புல்மறைத்தப் பாழ்கிணறுபோல்
பாணமெய்தினான் மறைந்திருந்து
மாண்டான் வாலி - வீரனவன்

அறத்தோடுப் போரிட்டவனை
திறத்தால் வெல்லாது
புறத்தால் கொன்றே
புகழ்மகுடம் கொண்டவனே

எதிர்த்து நீவந்திருந்தால்
எமலோகம் சென்றிருப்பாய்
மறைந்துக் கொன்றதனால்
மாறாபழிச் சுமக்கிறாய்

சுக்ரீவனின் தேவை
சீதையை மீட்கவென்றால்
பாதைக் காட்டி - உனது
மனையாளை மீட்டிருப்பேனே

இப்போதோ

விலங்கை கொல்ல
விதிகள் வேண்டாமென்கிறாய்
ஏலாமை மறைக்க
ஏதோதோ காரணம் தேடுகிறாய்







1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதற்கு ஏகப்பட்ட காரணம் சொல்வார்கள்...

ம்... கதைகளாகவே பார்ப்போம்...

வல்லினக் காதல்

  க ன்னியின் வேண்டுதல் காளையால் கைகூடுமோ க ச ந்த காதல் காக்க வழிகாட்டுமோ கண் ட வுடன் அழைத்து காதலி கைப்பற்றுமோ கலந் த மனங்கள் களிப்புற்று வ...