வெள்ளி, மே 8

கடைக்கண் பார்வை



 

கன்னியின் கடைக்கண் பார்வை
   கண்டவனுக்கு காதல் உண்மை
அன்ன ஆகாரமில்லா காளைக்கு
    அணங்கிடம் தோற்க வெறுமை
சன்னியாசி கோலம் பூண்டே
    சதிகாரி என்பதோ பொய்மை
உன்னாசை மாறிட்டாலும் - காதல்
    உலகம் இயங்குவதால் பருண்மை

மாளும் ஈரூடலால் மீளுமோ
    மறித்த தெய்வீக காதல்தான்
வீழும் உலகின் விதிவசமென
    வீணணாய் இருப்பது வாழ்வோ
செழுமை பெற்ற காதலாய்
   சேர்ந்து இணைந்து வாழ்ந்திட
நாளும் உழைப்போம் - நரம்பிசைக்க
    நாமும் காதல் புரிவோம்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...