வெள்ளி, மே 8

கன்னி



நறுமணம் உலவி வர
நந்தா விளக்கு ஓளிவீச
நாற்திசையும் புகழிருக்க
நான் காணுகிறேன் கன்னியவளை

பெயர் சொல்லி அழைக்கிறேன்
பேதையவள் துள்ளித் திரிகிறாள்
பொன்னுடல்தனை தொட்டு பார்க்க
புன்னகையை அள்ளி வீசுகிறாள்

பேரழகி என் கைபிடிக்க
பண்டிதனாய் கிறுக்க
பாவையவள் தீஞ்சுவை என்றாள்
பலவித கனவு கண்டேன்

அமுதொன்று பருகினேன்
அஃது  போல் வேறொன்றில்லை
அது மா, பலா போன்றதென - சுவை
அறியா நாவலர்  உரைக்கலாம்

என்னை பேச வைத்தாள்
எழுலுகை பாட வைத்தாள்
எங்கெங்கும் அவள் ஓவியம்
எனினும் எனக்கவள் காவியம்

ஆன்றோர் பலரும் வாழ்த்த
அவளை நானும் மணக்கிறேன்
என்னுடன் வாழும் நேரிழையாள்
ஏகாந்த "தமிழ்" கன்னியல்லவோ




கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...