சனி, மே 9

சொந்தம் தொடர


உதிக்கும் போதே எனக்கு
    உத்திரவாத சாசனம் எழுதி
மரிக்கும் நிலைக்கு தள்ளியது
    மடமை வேத சொந்தம்மா
தாய்க்கு தம்பி என்று
   தாரமா னேன்ஒரு நன்னாளில்
நாய்க்கும் கீழாக இன்று
    நான் வாழும் நிலையானேன்

விட்ட உறவை தொடர
    கட்டி வைத்தனர் என்னை
கிட்ட வந்த அவனிடமோ
    கெட்ட வாடை வீச
எட்டி சென்ற என்னை
    திட்டிய ஒற்றைச் சொல்லோ
பெட்டை கோழியே உன்வேலை
     குட்டி போடுவது என்றானே

ஆயிரம் சொத்து இருந்தும்
    ஆங்கொரு நிம்மதி இல்லை
போயிரும் உயிரை நானும்
     போகாது பிடித்து வைக்க
வளர்த்தவளும் வந்து பார்த்து
    வண்டியாய் கண்ணீர் விட்டாள்
மலராது கருகும் வாழ்வு
    மடியும் காலம்வரை  துரும்பாகவே
   

கருத்துகள் இல்லை:

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...