திங்கள், மே 4

சகலமும் நீயே



எம்மன ஆலயத்தின்  தேவியாய்
    என்னை கவர்ந்தவள் அமர்ந்திருக்க
அம்பலத்தில் இல்லாத தேவிக்கு
     ஆராதனை  ஆராட்டு  ஏனோ
சுடரொளியாய் விளங்கும் விழியில்
     சுழன்றடிக்கும்   வெளிச்ச மிருக்க
சடங்காய்  தீபவொளி எதற்கு
    சர்வேஸ்வரி  எனமுகம் காட்டவோ
   
தேவியின் கடைக்கண் வேண்டிட
       தருணம் இதுவல்ல என்றாளே
கூவியும் தராத தேவியிடமா
    கும்பிட்டு  வரங்கள் கேட்பேன்
ஆவியும் நினது சரணமென
    ஆவண சாசன  மாக்குகிறேன்
புவியில் வாழும் வரையில்
    பேதையே தாராயோ நினதருளை

ஆடும் ஆங்கார நாயகிக்கு
      ஆறுகால  அருஞ்சுவை உணவிருக்கு
பாடுபட கைகள் இரண்டிருக்கு
    பாதையில் இணையாய் வாமயிலே
மாடுமனை மச்சான் நானிருக்கேன்
    மண்ணைத் திருத்தவோம் பொன்மயிலே
வீடுநிறை  விளைச்சலால் பெண்ணே
    வீதியோடு விருந்துண்டு மகிழ்வோம்


ஆயுதத்தால் என்ன பயனடி
     ஆரை  வதைக்க அவதாரமடி
பாயும் விழியின் வீச்சால்
    பணிந்தேன் உன்னிடம் சரணமடி
சூரனை  சூலத்தால் கொல்ல
     சூத்திரம் வகுத்தவள் சாமுண்டி
தீரனம்மா திலகமிடு மெல்ல
     தீஞ்சுவை வாழ்வை வேண்டி

நான்மாட கூடலில் வாழ்வதற்கு
     நான்கு வாசல் கொண்டவளாம்
உன்னோடு கூடி வாழ்வதற்கு
    உன்னிதய வாசல் போதுமடி
அனலாய் அக்னியான அவளா
    அகிலதிற்கு அருள்வாள் சொர்க்கம்
தனலாய் தகிக்மெனை அணைத்திட
    தணியுமே  காண்பேனே சொர்க்கம்


 

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...