வெள்ளி, ஏப்ரல் 16

வித்தகனே! மன்னவனே!






அருகில் நீயிருக்க
அத்தனையும் மறந்திடுமே
அஞ்சுகமே உனையணைக்க
ஆனந்தம் பெருகிடுமே


சிந்தையில் ஏதுமில்லை
சித்தார்தன் நிலையுமில்லை
சுந்தரப் பாண்டியனாய்
சந்தேகம் ஒன்றுமில்லை

கொத்துமலர் கொடுத்தவனே – நின்
சித்து விளையாட்டை நானறிவேன்
கற்றலில் நீயொரு வித்தகனே
முற்றுமோ என்காதல் மன்னவனே?!


நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...