வியாழன், ஏப்ரல் 29

சுடலையாண்டி

 




கால் பணம்
முழத் துண்டு
வாய்கரிசி
ஏதுமில்லை

எரிக்கவோ
புதைக்கவோ
உடன் பாலோ
யார் அறிவார்

வீட்டிற்குள் வரவில்லை
வீதிவழிச் செல்லவில்லை
காடுவரை யாருமில்லை
கடைசி வரை???????

அலங்காரப் பாடையில்லை
அழுவதற்கு நாதியில்லை
அதன் பெருமையுரைக்க
ஓர் ஒப்பாரியுமில்லை

ஊர் மெச்ச வாழ்ந்தவன்
உலக விட்டுப் போகையில
உற்சவமாய் கொண்டு செல்ல
ஒருவரும் ஒப்பவில்லை

ரேஷனில் காத்திருந்தான்
தியேட்ரில் காத்திருந்தான்
ஒட்டுப்போடக் காத்திருந்தான்
ஒய்யாமாரி இடுகாட்டிலும்…………………….

அய்யகோ
அரிசந்திரன் கதையில்லை
ருத்ர பூமியில்
உறங்கவும் இடமில்லையே

கருத்துகள் இல்லை:

ஆணவத்தின் அடிச்சுவடு

    ஆணவத்தின் அடிச்சுவடு அச்சனாதன சாதியடுக்கே ஊனமாக்கிய உன்மனதை உலுக்கலியே கொலைகளும் நாணமின்றி மனிதனென நாட்டில் சொல்லாதே வீணானச் சாதிய...