புதன், ஏப்ரல் 14
விழிபேசும் மொழியென்ன கேட்கிறேன்
விழிபேசும் மொழியென்னக் கேட்கிறேன்
விடுகதையா, விடையா வினவுகிறேன்
மொழிபெயர்க்க அகராதித் தேடுகிறேன்
மொழிகளின் வகைதனை அறிகிறேன்
பொழிகின்ற அன்பைதான் காண்கிறேன்
பொல்லங்கு ஆகுமோ புரியலையே
வழிவழியாய் வந்தவர்களை நாடுகிறேன்
வாலிப வயதென வாழ்த்துகின்றார்
ஆழிப் பேரலையாய் மனமுறிவு
ஆதலினால் வந்தது மணமுறிவு
பழிபேசும் சமுகத்தைக் காண்கின்றேன்
பகல்கனவா வாழ்க்கை யோசிக்கிறேன்
இழிவோ மறுவாழ்வு இவ்வுலகிலே
இணையாய் வருவதற்கு இடைஞ்சலோ
வாழியகா தலென்று வருவாயோ!
வழியில்லை எனகத வடைப்பாயோ?
ஏழிசையில் ஆரோகணம் அவரோகணம்
எப்படி இசைத்திடவும் இனிமையே
பழிப்பரென இளமையை இழக்கலாமோ
பாரென வாழ்வது இலக்கணமே
தோழியாய், இணையாய் இணையலாம்
தோற்பது நம்முடைய இலக்கல்ல
வீழ்வது விதிவசமென முடங்காது
வாழ்ந்துக் காட்டுவோம் வாழ்க்கையை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
2 கருத்துகள்:
அருமை
அருமை...
கருத்துரையிடுக