திங்கள், ஏப்ரல் 26

மயிலக்காள மச்சானே





கூரை வேய்ந்த
   குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
    யாத்திரை வந்த
கூரைச் சீலை
    கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
    கைப்பிடித்து வாரேன்


அஞ்சாறு நாளா
    அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
    படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
    சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
     நிலவும் காயுதடி


மயிலக்காள மச்சானே
    மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
    தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
   அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
    ஞாபகம் கொள்வாயா


வாழும் வாழ்க்கையில்
    வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
    பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
    புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
    விசால உலகிலே


கருத்துகள் இல்லை:

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...