திங்கள், ஏப்ரல் 26
மயிலக்காள மச்சானே
கூரை வேய்ந்த
குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
யாத்திரை வந்த
கூரைச் சீலை
கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
கைப்பிடித்து வாரேன்
அஞ்சாறு நாளா
அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
நிலவும் காயுதடி
மயிலக்காள மச்சானே
மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
ஞாபகம் கொள்வாயா
வாழும் வாழ்க்கையில்
வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
விசால உலகிலே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக