திங்கள், ஏப்ரல் 26
மயிலக்காள மச்சானே
கூரை வேய்ந்த
குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
யாத்திரை வந்த
கூரைச் சீலை
கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
கைப்பிடித்து வாரேன்
அஞ்சாறு நாளா
அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
நிலவும் காயுதடி
மயிலக்காள மச்சானே
மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
ஞாபகம் கொள்வாயா
வாழும் வாழ்க்கையில்
வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
விசால உலகிலே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடைசி வாய்ப்பு
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
-
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி. இது பெண்களிடம...
-
கெண்டைக் கண்கள் தண்டைக் கால்கள் அண்டை அயலார் அண்ட நினைக்கும் பேரண்டத்தின் பேரழகி சிவந்த அதரங்களால் சிந்தியச் சொற்கள் அட்சரச் சுத்தமாய் ஆலா...
-
குமரனா நீ கோபத்துடன் கோமளவல்லி கேட்க சுருக்கம் விழுந்ததாவென சுறுசுறுவென கண்ணாடியை தேடினவள் பாட்டி வைத்தியத்தை பலமுறைத் தேடி பரிசீலித்துப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக