செவ்வாய், மே 4

நந்தவனமோ?

 



சமரசம் உலவுமிடம்
    சச்சரவுகள் தொடருமிடம்
சமயங்கள் பிரிந்தவிடம்
    சாதியும் சம்மணமிடும்
சமமில்லாச் சமுகத்தை
    சாக்காடும் சொல்லுமிடம்
சமர்புரிந்த மானுடம்
    சமரசம் ஆனவிடம்

நெருக்கடி நகரத்தில
    நேரெதிரா நந்தவனம்
நெருடல் ஏதுமில
    நேரடியாச் சொர்க்கமில
ஆறடி நிலமுமில
    அங்கேச் சாம்பலுமில
கூறடிக் கோலமெங்கே
    கூப்பிட்டப் பெயரெங்கே

நல்லதொரு நந்தவனமோ
    நாலுபேருக் கூடுமிடமோ
அல்லல்படு மக்களுக்கு
    அதுவொரு இடுகாடோ
புல்லர் புலையருக்கு
    போகும்வழி இடரிருக்கு
மல்லருக்குக் கடற்கரையில்
    மாடமாளிகைக் கட்டிருக்கு


கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...