சனி, மே 8
கண்டாங்கி சீலக்காரி
கண்டாங்கிச் சீலக்காரி
காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
புதுசுகம் தேடலாமடி
கெண்டைக் காலு
கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
தாளம் போடுது
அண்டச் சொல்லுது
அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
தாசன் ஆவேன்
வக்கணையா பேசும்
வேலனே தாசனே
அக்கறையா வாரும்
அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
தாராளமா விளையாடும்
வண்டின் நிலையறிந்து
வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
ஆயுளை நீட்டிப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக