சனி, மே 8

கண்டாங்கி சீலக்காரி







கண்டாங்கிச் சீலக்காரி
      காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
       திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
       ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
      புதுசுகம் தேடலாமடி


கெண்டைக் காலு
      கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
       தாளம் போடுது
அண்டச் சொல்லுது
       அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
      தாசன் ஆவேன்


வக்கணையா பேசும்
      வேலனே தாசனே
அக்கறையா வாரும்
      அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
      பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
      தாராளமா விளையாடும்


வண்டின் நிலையறிந்து
      வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
     தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
     பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
    ஆயுளை நீட்டிப்போம்


மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...