சனி, மே 8
கண்டாங்கி சீலக்காரி
கண்டாங்கிச் சீலக்காரி
காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
புதுசுகம் தேடலாமடி
கெண்டைக் காலு
கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
தாளம் போடுது
அண்டச் சொல்லுது
அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
தாசன் ஆவேன்
வக்கணையா பேசும்
வேலனே தாசனே
அக்கறையா வாரும்
அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
தாராளமா விளையாடும்
வண்டின் நிலையறிந்து
வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
ஆயுளை நீட்டிப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நோய்
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
-
நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி. இது பெண்களிடம...
-
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக