ஞாயிறு, மே 23
திருநங்கையர் வாழட்டும்
அர்த்தநாரி ஆண்டவனால்
ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
புலரியோ ஒன்றுமில்லை
இடப்பக்க உமையவளே
இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
பலப்படி உயர்ந்திடுவர்
இலக்கின்றிச் சென்றவர்
இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
நெடும்பயணம் சென்றனர்
பெற்றோர் புறந்தள்ள
பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
வெஞ்சமரில் வென்றவளே
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
பந்தத்தில் சேர்த்தே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நளினம்
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
இருவருக்குள் இன்னும் ஏதோதோ தேடல் எனவே இணைந்தே இருக்கிறோம் அன்பிருக்கிறது ஆயினும் கொடுபடாதது கொஞ்சமிருப்பதால் கொஞ்சல்கள் தொடர்கின்றன அதுபோ...
-
ஏற்றத் தாழ்வுகள் ஈகைக்கு காரணமா மாற்றும் நிகழ்வுகள் மாயத்தில் நடக்குமா உயர்வும் தாழ்வும் உழைப்பில் என்றால் வியர்வை சிந்தியும் விடியல் இல்ல...
-
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
-
மாநிலம் அறியா மறைக்கப்பட்டத் திருமணம் மாய வித்தைகளால் கண்டங்கள் கடந்து அறியப்பட்டது மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமா முனீரின் ம...
2 கருத்துகள்:
அருமை...
அருமை
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
கருத்துரையிடுக