திங்கள், மே 17

இயற்கையோடு நீ


 




மண்ணில் விதை முளைக்கும்
மனசில் நீ முளைச்ச
காற்றில் மகரந்தம் பரவும் - நின்
கண்ணில் காதல் பரவும்


மேகமோத் திசை மாறும்
பேதையின் மனம் எனதாகும்
மோகம் கொண்ட மாமனுக்கு - நின்
முகதரிசனமே மருந்தாகும்


மலரும் கொடியும் உயிராகுமே
சிலம்பும் நடையும் உயிரோட்டமே
வளரும் காதலும் இயற்கையாகும் – நின்
வரமே எனது வாழ்வாகுமே


மழையால் மண் செழிக்கும்
மறவன் கண் மயங்கும்
உழைப்பே உயர்வாகும் – நின்
உறவே உன்னதமாகும்

கருத்துகள் இல்லை:

அறிந்தும் அறியாதது

  முற்பனிக் காலத்தில் முத்தழல் பற்றியெரிய முக்கனிச் சுவையை முக்காலமும் தேடிட இணையாய் வாழ இசைந்தோர் ஒப்பந்தம் இச்சையும் இடங்கொடுக்க இடைக்கட்ட...