திங்கள், மே 17

இயற்கையோடு நீ


 




மண்ணில் விதை முளைக்கும்
மனசில் நீ முளைச்ச
காற்றில் மகரந்தம் பரவும் - நின்
கண்ணில் காதல் பரவும்


மேகமோத் திசை மாறும்
பேதையின் மனம் எனதாகும்
மோகம் கொண்ட மாமனுக்கு - நின்
முகதரிசனமே மருந்தாகும்


மலரும் கொடியும் உயிராகுமே
சிலம்பும் நடையும் உயிரோட்டமே
வளரும் காதலும் இயற்கையாகும் – நின்
வரமே எனது வாழ்வாகுமே


மழையால் மண் செழிக்கும்
மறவன் கண் மயங்கும்
உழைப்பே உயர்வாகும் – நின்
உறவே உன்னதமாகும்

கருத்துகள் இல்லை:

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...