ஞாயிறு, மே 16

என்னாசை மச்சானே….!!

 


என்னைப் பாரும்
     ஏரோட்டும் மச்சானே
புன்னை நிழலில்
     பொழுதுக்கும் பேசலாமா
தென்னை அருகில்
     தெளிந்தச் சுனையில்
மீனாய் நீந்தலாமா
     மன்மதனைக் காணலாமா

அண்டை வெட்டும்
     ஆளா வாரேன்
கெண்டை மீனையும்
     கொண்டு தாரேன்
கண்டாங்கிச் சீலையும்
     கழுத்துத் தாலியும்
கொண்டு வாருமய்யா
     கைத்தலம் பற்றுமய்யா

காட்டைத் திருத்தி
     கருங்குறுவை பயிரிடுவோம்
மாட்டைப் பூட்டி
     மளமளவென நீரைப்போம்
போட்டிக்கு வாருமய்யா
     பொழுதுக்குள் கதிரறுக்க
இட்டம் கொண்டே
     இச்சொன்று தாருமய்யா

வீட்டைப் போல
     வீதியை பாருங்க
ஓட்டைக் குடிசை
     உறவையும் கூப்பிடுங்க
திட்டம் போட்டு
     திரவியம் தேடுவோம்
வாட்டம் இன்றி
     வளமையாய் வாழுவோம்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...