சனி, மே 15

புதிய கல்வி கொள்கை

 


அறியாததை அறியவும்

     ஆதியைத் தேடி ஓடவும்
அறிந்ததை அகிலத்தில்
     ஆலம் விழுதாய்ப் பரப்பவும்
அறம்தனை வகுத்து
     ஆறறிவு உயிராய் உயரவும்
அறுதியிட்டுக் கூறுவோம்
      ஆகச் சிறந்ததுக் கல்வியென

சுனாமி வந்துச்
      சொத்தைச் சுருட்டி சென்றாலும்
வினாக்களில் விடைதனை
      விரிவாய்த் தேடி படைப்பாய்
கனாக்களில் நிலவை
      காதலியாய்ப் பாடி திரிவாய்
நனவாக்க நாசாவில்
     நிகழ்ச்சி நிரல்தனை வரைவாய்

வள்ளுவன் வகுத்த
      வளமான நீதி நெறிகளை
கள்ளன் வடவன்
      காரியமா மாற்ற முயல்வான்
பொல்லா வேதத்தை
      புதிய கல்வி என்றிடுவான்
கல்வி அழியுமோ
      காப்பாற்றக் கூக்குர லிடுமோ

அழியாதது கல்வி
      ஆயினும் அமைதி காப்பாயா
பழியேதும் அண்டாத
      பொதுவான கல்வி கேட்பாயா
தழலாய்க் குலகல்வி
      தவிர்திடு நினது ஞானத்தால்
விழலாய் ஆகாது
      விதைத்திடுக் கல்வி அழியாது

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குறள் சொல்லியும் ஏமாற்றுவான் வெங்கோலன்...

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...