சனி, ஜூலை 16

வரைமுறையற்ற கட்டிடங்கள் இடிப்பு

கடந்த இரு நாட்களாக வரைமுறையற்ற கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக ஒரு செய்தி.   கடந்த முறை இதே போன்றதொரு நிலை.  நீதிமன்ற தடையாணை  இன்னும் சில காரணங்களால் ஒத்திவைப்பு.  தடையாணை ஒவ்வொரு ஆண்டும் வேறு நீட்டிக்கப்பட்டது.

தியாகராய நகரில் மட்டும் floor space index (FSI) 1.5 பதிலாக 9 விகிதத்தில் உள்ளதாக செய்திகள் குறிப்பிடுக்கின்றன.  வாகன நிறுத்துமிடம் சுத்தமாக இல்லை.  நடப்பதற்கே இடமில்லை.

வணிக நோக்கம் மட்டுமே குறிக்கோள்.  இதே பகுதியில் ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டும் நீதிமன்றமோ, அரசோ விழித்தெழவில்லை.

பாதுகாப்பு என்பது சிறிதும் கிடையாது இத்தகைய கட்டிடகளில்.  இங்கே பாதிக்கப்படுவது பொது மக்கள்.

தரை மற்றும் முதல் தளம் இருக்க வேண்டிய இடத்தில்  தரைகீழ் தளம், மற்றும் 6 முதல் 8 மாடிகள் வரை உள்ளன.  இதற்கு அங்கீகாரம் இல்லவே இல்லை ஆனால் வியாபாரம் நன்றாக நடக்கிறது.

இவர்களால் சராசரி நிலத்தின் விலை 10 மடங்கு கூடுதலாக விற்கப்படுகிறது.  அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டால் விலை தனாக குறைந்து விடும்.

அங்கீகரிப்பட்ட திட்டப்படி கட்டிடங்கள் கட்டப்படுமா?

விலை குறையுமா? அல்ல

கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்குமா?
அரசு அவகாசம் தருமா?

வேடிக்கை பாருங்கள் மக்களே

H1B

H₂O HbA1c இதுபோல H1B இருக்குமோ கடவுச் சீட்டு அல்லாது கனவு தேசத்தில் நுழைய அடிமை ..... அல்ல அல்ல அனுமதிச் சீட்டாம் அறிவாளிகளுக்கென அந்நாளில் ...