வியாழன், மே 27

வசந்தகால வானம் பாடிகள்

 


இளவேனிற் காலத்தில்
…… இளஞ்சோடிப் பாடித் திரிய
தளர்வற்ற ஊரடங்கில்
…… தத்தளித்தேத் தேடி வாட
இளமை முறுக்கில்
…...இதயம் தேடிச் செல்ல
விளக்கம் கேட்டு
……. வீதியில் காவலர் தடுக்க


ரோசாப்பூ வாசம்
…… ராசாத்தி நினைப்பக் கூட்டுது
நேசத்தின் வேகம்
…… நொடிநேரம் ஒளியாண் டானது
வசந்தத்தை தேடும்
……. வசந்தகால வானம் பாடிகளை
தேசத்தின் பெருந்தொற்று
…… தேவை யின்றி வாட்டுது

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமம் தான்....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இதுவும் கடந்து போகும்

ஆணவத்தின் அடிச்சுவடு

    ஆணவத்தின் அடிச்சுவடு அச்சனாதன சாதியடுக்கே ஊனமாக்கிய உன்மனதை உலுக்கலியே கொலைகளும் நாணமின்றி மனிதனென நாட்டில் சொல்லாதே வீணானச் சாதிய...