சனி, மே 8
கண்டாங்கி சீலக்காரி
கண்டாங்கிச் சீலக்காரி
காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
புதுசுகம் தேடலாமடி
கெண்டைக் காலு
கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
தாளம் போடுது
அண்டச் சொல்லுது
அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
தாசன் ஆவேன்
வக்கணையா பேசும்
வேலனே தாசனே
அக்கறையா வாரும்
அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
தாராளமா விளையாடும்
வண்டின் நிலையறிந்து
வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
ஆயுளை நீட்டிப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் 2024
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
பாரதமாம் பஞ்சப் பாண்டவர்களாம் பக்தி இலக்கியமாம் பாராய்!! கதை கேளாய்!! மானிரண்டு மையலிலே மன்னன் பாண்டுவோ காட்டில் வேட்டையிலே கொன்றனன் ஆண்...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக