கட்டழகு என்றே
காளைகள் தடுமாற
தொட்டுப் பழகிட
தொலைந்தன மாயை
காளைகள் தடுமாற
தொட்டுப் பழகிட
தொலைந்தன மாயை
விளக்கவுரை கற்பனையே
எண்ணங்களில் ஏற்படும்
எழில்யாவும் சொற்சுவையே
நிறத்தில் தேடுவதும்
நிகரென உரைப்தும்
அறமென அறியாது
அழகை ஆராய்வது
மாயப் பிசாசென்று
மாதரை பழித்து
காயம் பொய்யென
கதைத்ததை மாற்றிட
மானமும் அறிவும்
மனிதருக்கு அழகென
ஊனச் சமூகத்தில்
ஊட்டிய பகுத்தறிவால்
விழைவு ஏதென்று
வீதியில் காணீர்
அழகெனும் மாயை
அகன்றது பாரீர்
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக