ஞாயிறு, பிப்ரவரி 23
முத்தத்தில் முழ்கடிடா
மோகத்தில் திளைப்போமடா
மெய்மறந்து கற்போமடா
ஏகாந்த வேளையில்
ஏழிசைதனை இசைத்திடடா
தாகத்தினைத் தணித்திட
தண்ணிலவா குளிர்ந்திட
யாகத்தினை நடத்திடு
யௌவனம் விழிக்குமடா
சொற்சுவை தன்னில்
சொக்கிட வைத்தவனே
பொற்புடை அரிவையை
போற்றத் தெரியாதோ
காற்றின் மொழிதனில்
காதலை அறியலையோ
பாற்கடல் அமுதத்தை
பரிமாற விரும்பலையோ
சித்தத்தில் நிறைந்தவளை
சிணுங்க வைக்காதே
புத்தனாகிப் புலனொடுக்கிப்
பூவையை வருத்தாதே
பித்தம் தெளிவதற்குள்
பிரபஞ்சம் முடிவதற்குள்
மொத்தத்தில் கைப்பற்றி
முத்தத்தில் முழ்கடிடா
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவுமொருத் திருமணம்
நட்டநடு வீதியில் நாட்டிலுள்ளோர் கூடிட நாயகன் நாயகியை இணையாய் ஏற்றுக் கொண்டான் இட்டத்தோடு இச்சடங்கு என்றாலும் எதிர்ப்புகள் இல்லாமலில்லை அலங...
-
வளமிக்க வாழ்வில் வசந்தத்தைக் கூட்டவும் தளரும் பருவத்தில் தண்டம் தவிர்க்கவும் இளமையை நீட்டித்து இனியதாய் மாற்றவும் களமிறங்கு காலத்தே காத்தி...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
நட்டநடு வீதியில் நாட்டிலுள்ளோர் கூடிட நாயகன் நாயகியை இணையாய் ஏற்றுக் கொண்டான் இட்டத்தோடு இச்சடங்கு என்றாலும் எதிர்ப்புகள் இல்லாமலில்லை அலங...
-
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக