தனித்தீவா நானிருந்தேன்
தடுத்தாட் கொள்ளவந்தாய்
இனியென்ன என்றபோது
இதயமதை தந்தாய்
பனிபடர்ந்த பொழுதிலும்
பாற்கடல் அமுதளித்தாய்
எனினும் ஏனின்று
ஏசிச் செல்லுகிறாய்
அன்பிலே விளைந்ததை
அறிவினால் ஆய்திடாதே
துன்பத்திலே வீழ்வதற்கு
தூபத்தை போடாதே
இன்னலில் விடுபட
இசைவோடு வாழ்ந்திட
கன்னலே கனிவோடு
கண்ணாளனை காத்திடு
ஆழிப் பேரலையாய் நீவந்தாய்
ஆடிய தாண்டவ தானறிந்தேன்
ஆழி விரலிட்ட கணையாழியை
ஆலகால மென்றே வீசுகிறாய்
நாழிகை நாளென்ன தேவி
நற்றுணை நானுனக்கு வாராய்
வாழிய தலைவி என்றே
வையம் வாழ்த்திட வாழ்ந்திடவே
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக