மதம் என்பது மார்கமா
மானுடத்தின் பிரிவினை தர்கமா
நிதம் நிதமொரு மார்கமா
நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
வரம் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்
பெரியாரின் சீர்திருத்தம்
பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
உதவாத மதங்களை ஒழிக்கலையே
தளர்வோடு நாமிருந்தால்
தரணி சிறக்க வழியில்லையே
மானுடம் என்பதால்
மனமைதிக்கு மதங்கள் வேண்டுமா
காணும் சரித்திரத்தில்
கண்ட புதைகுழிகள் போதாதா
சமணம் அழிந்து
சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினும்
அதுவொரு மாதமாக வளரனுமா
அன்பு அமைதியென
அகிலத்திற்கு போதை தரும்
பின்பு சிறுபான்மை
பெரும்பான்மை எனபேதம் வளர்க்கும்
உயர்வு தாழ்வெல்லாம்
உன்விதி என்றே வகுக்கும்
அயர்வின்றி உழைப்போம்
ஆண்டவனை அறவே ஓழிப்போம்
ஊனம் உள்ளத்திலிருக்க
உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
பெரியார் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவர்குமில்லை
நானும் மனிதனென உரிமைகோரி
வெள்ளி, மார்ச் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நளினம்
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
இருவருக்குள் இன்னும் ஏதோதோ தேடல் எனவே இணைந்தே இருக்கிறோம் அன்பிருக்கிறது ஆயினும் கொடுபடாதது கொஞ்சமிருப்பதால் கொஞ்சல்கள் தொடர்கின்றன அதுபோ...
-
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
-
ஏற்றத் தாழ்வுகள் ஈகைக்கு காரணமா மாற்றும் நிகழ்வுகள் மாயத்தில் நடக்குமா உயர்வும் தாழ்வும் உழைப்பில் என்றால் வியர்வை சிந்தியும் விடியல் இல்ல...
-
மாநிலம் அறியா மறைக்கப்பட்டத் திருமணம் மாய வித்தைகளால் கண்டங்கள் கடந்து அறியப்பட்டது மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமா முனீரின் ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக