மதம் என்பது மார்கமா
மானுடத்தின் பிரிவினை தர்கமா
நிதம் நிதமொரு மார்கமா
நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
வரம் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்
பெரியாரின் சீர்திருத்தம்
பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
உதவாத மதங்களை ஒழிக்கலையே
தளர்வோடு நாமிருந்தால்
தரணி சிறக்க வழியில்லையே
மானுடம் என்பதால்
மனமைதிக்கு மதங்கள் வேண்டுமா
காணும் சரித்திரத்தில்
கண்ட புதைகுழிகள் போதாதா
சமணம் அழிந்து
சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினும்
அதுவொரு மாதமாக வளரனுமா
அன்பு அமைதியென
அகிலத்திற்கு போதை தரும்
பின்பு சிறுபான்மை
பெரும்பான்மை எனபேதம் வளர்க்கும்
உயர்வு தாழ்வெல்லாம்
உன்விதி என்றே வகுக்கும்
அயர்வின்றி உழைப்போம்
ஆண்டவனை அறவே ஓழிப்போம்
ஊனம் உள்ளத்திலிருக்க
உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
பெரியார் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவர்குமில்லை
நானும் மனிதனென உரிமைகோரி
வெள்ளி, மார்ச் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மும்மொழிக் கல்வி
மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...
-
மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...
-
தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...
-
அழிவற்ற ஆன்மா அகிலத்தில் உண்டோ எழில்மிக்க மானுடத்தில் எதுவென்று உரைப்பீரோ மொழியற்று இருக்குமோ மெய்யற்று வேறாகுமோ வழிவழியாய் ஆன்மா வந்ததை ய...
-
செயற்கை நுண்ணறிவு செல்லாக் காசாக்கியது செருக்குடனிருந்த அமெரிக்காவை 51 இலட்சம் கோடி அங்கு காணாமல் போனது ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை கொள்ளை ந...
-
காதல் வேண்டி கட்டியவளிடம் கோரிக்கை காதில் வாங்கவில்லை ஆண்டு முழுதும் ஆண்டனுபவிக்க அருள் கேட்க பட்டத்தரசி பட்டியலிட்ட காரணங்கள் பட்டினிக்கே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக