குலமென்ன, கோத்திரமென்ன
கூடிக் களிக்கையில்
நினைக்கவில்லை
வலமென்ன இடமென்ன
வாதம் செய்கையில்
மதிக்க வில்லை
ஆணென்ன பெண்னென்ன
எல்லாம் மனிதம்தான்
என்றிருக்கையில்
காதலென்றேன்
கைபிடிக்க வேண்டுமென்றேன்
மோதலாகி போச்சு
மதிப்பென்ன மரியாதையென்ன
மாறி மனமுடிப்பின்
மானம்தான் போகுமென்றார்
ஊர் அழைத்து
உற்சவம் நடத்தி
உறவு கொள்ள வேண்டுமாம்
நடத்துங்கள் என்றேன்
நடவதாம் - நான்
மணமகனாயின்
இணையாக சுற்றியத்தை
இகலோகமெல்லாம் பார்த்தபின்
இவர்கள் பார்த்ததால்
பரலோகம் அனுப்ப
பாடை தயார் செய்வதாய்
பரப்புகின்றனர் செய்தியை
கிளை முறித்து
நீரூற்றுவோம்
கிள்ளையை மறவென்று தகவல்
என்னை முறித்து
எங்கு நட்டாலும்
எது வளரும் என்றேன்
முறிந்தபின் உயிரேது
நட்டபின் நட்டமேது
அறிந்துகொள் என்றனர்
அறியாது தவிக்கிறேன்
அவள் நிலை - எனினும்
முறியாது என்றே நினைக்கிறேன்
கூடிவாழ
அன்பு வேண்டும்
கூட வேறேது வேண்டும்
வள்ளுவனும்
அந்தவழி வந்தவனும்
என்றும் உரைப்பது
ஆயினும்
அவரவர் வேண்டுவது
அஃதல்லவே
காதலின் வெற்றி
காதலித்தவளை கைப்பிடிப்பதல்ல
காலமெல்லாம் அவளோடு வாழ்வது
ஆதலின் மனமே
அவளையே நாடு
அந்த செய்தியை அவளிடம் கூறு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
அறிவேணி ஆசிரியர் அகரத்தில் ஆரம்பித்து அறிவியல் ஆயிரம் அதனுடன் அறநெறி சிறியோர் நெஞ்சில் சிறப்புடன் பதித்திட செறிவுற்ற மாணவனாய் செயலாற்ற மகிழ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக