திங்கள், மார்ச் 8

காவேரி

பாடுபட் டுழைக்க கையிருக்கு
   ஏறுபூட் டியுழ மாடிருக்கு
நாடுவிட் டுபாய நதியிருக்கு
    நடுவிலே தடுக்க கருநாடகமிருக்கு
தாறுமா றாபல கட்சியிருக்கு
    தண்ணியால பிரிஞ்சி கிடக்கு
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
    உழுத வயிறோ காய்ந்திருக்கு

வயிறு காய்ந்து
    வயலெலி உண்ட  போதும்
பயிறு கருகி
    பாசன நீரற்ற போதும்
விளைந்த நெல்லோடு
    வீதியில் நின்ற போதும்
கலைந்தன கனவுகள்
    காப்பது அரசல்ல என்று

கருத்துகள் இல்லை:

அடையாளம்

ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...