திங்கள், மார்ச் 8

காவேரி

பாடுபட் டுழைக்க கையிருக்கு
   ஏறுபூட் டியுழ மாடிருக்கு
நாடுவிட் டுபாய நதியிருக்கு
    நடுவிலே தடுக்க கருநாடகமிருக்கு
தாறுமா றாபல கட்சியிருக்கு
    தண்ணியால பிரிஞ்சி கிடக்கு
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
    உழுத வயிறோ காய்ந்திருக்கு

வயிறு காய்ந்து
    வயலெலி உண்ட  போதும்
பயிறு கருகி
    பாசன நீரற்ற போதும்
விளைந்த நெல்லோடு
    வீதியில் நின்ற போதும்
கலைந்தன கனவுகள்
    காப்பது அரசல்ல என்று

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...