செவ்வாய், அக்டோபர் 8

கலியுகம்



திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம்,

அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும் வராக அவதாரம் கொண்டு இராமேஸ்வரம் கோயில் சென்றதாகவும், பக்தகோடிகள் மிரண்டு போனதாகவும் அதனால் வராக அவதாரமும் மிரண்டதாகவும் செய்தி

அத்தோடு செய்தி முடியவில்லை

இராமனால் வழிப்பட்ட சிவனை இரண்டு வாசல் கடந்து பார்க்க முடியவில்லை வராக அவதாரத்தால்.

அதற்கே தீட்டு பட்டதாக கோயிலை மூடி பரிபாரம் செய்தனராம் சிவாச்சாரியர்கள்

வராக அவதாரம் எடுத்து உள்ளே நுழைந்ததே தீட்டு என்றால் மாம்ச மனிதா நீ நுழைந்தாலும் தீட்டு என்றுதானே கருவறைக்கு வெளியே நிறுத்தப்படுகிறாய்.

பன்றி நுழைந்து விட்டது இராமேஸ்வரம் கோவிலில்

மக்களிடம் மூட நம்பிக்கையில்லை அது அவதாரம் இல்லை பன்றி என கண்டுபிடித்து விட்டனர்.

ஆனாலும் தீட்டு.............................

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...