செவ்வாய், ஜூலை 17

இந்தியனா


மனிதனாய் இருக்காதே
இந்தியனாயிரு

மனிதன்தான் என்றால் - நீ
தீவிரவாதி

மக்களை நேசிப்பவனா - நீ
மாவோயிஸ்டு

அரசுக்கு எதிராக கேள்வியா - நீ
நக்ஸலைட்

உனது மதம்
உனக்கான தேசத்தை உணர்த்தும்

ஜோதியில் ஐக்கியமாயிரு
தேச பக்தனாவாய்

சாதியில் இணைந்திரு
சனாதனம் காத்தவனாவாய்

எந்த சாமிய வணங்கினாலும்
இந்துவென அறியப்படுவாய்

ஆயிரம் வழியென்றாலும்
அரசியலமைப்பு தீர்மாணிக்கும்

தமிழை நேசித்தால்
தரங் கெட்டவனாவாய்

எதிலும் சேராதவனா
எங்கள் விரோதி

மனிதா?!  மனிதனாய் நீயிருந்தால்
இந்தியனில்லை

ஞாயிறு, ஜூலை 15

போ...... போயிட்டேயிரு

ஆயிரம் நடக்கும்
அவலம் உனக்கா
அதனாலென்ன
அடுத்த வேலையை பார்

ஏமாந்தாயா?
ஏமாற்றப் பட்டாயா?
எதுவாயினும்
என்ன செய்து விடுவாய்

நேர்மை, உரிமை
நேற்று இன்று நாளை
என்றும் இல்லை -ஆக
நடப்பதை ஏற்றுக் கொள்

அதிகாரம் அவர்களிடம்
பொதிக் கழுதைகள்
சுமக்க மட்டுமே
சொடக்கு போட்டால் ........ சினிமா

பாவ பரிகாரமாய்
பாராள்பவரின் திருபலிகள்
பதிய வைப்பதற்கே
மீண்டும் உயிர்தெழாதிருக்கவும்

காடுகள் மலைகள்
மடுவூம் அணைகளும்
காக்கும் மக்களுக்கா
காசாக்கும் மன்னர்களுக்கா

வரிச் செலவுகள்
எட்டு வழியாயிருக்கலாம்
எந்தவழி   சரியென்பதும்
எமது வசதி

அதிகாரம் எதுவென
அறிந்த மக்களுக்கு
அருஞ்சொற் அகராதி
அச்சமென்றே சொல்லும்

அடக்குமுறை  - அரச
அச்சத்தின் வெளிப்பாடு
வெடிக்கும் போராட்டங்கள்
வழிகாட்டும் விடிவெள்ளிகள்


செவ்வாய், மே 1

துடைப்பக் கட்டைகள்


வாரான் வாரான் பூச்சாண்டி
  வாரணாசி கோட்டை தாண்டி
தெருவ கூட்டிக் காட்டுறான்டி 
  திமிருதானே தினமும் செய்வானா 
எருமை சாணம் பொறுக்குவானா 
  எங்கள் சேரிக்கும் வருவானா 
உரிமை ஓட்டை போட்டதால 
  ஒருநாள் கூத்தை காட்டுறானா

எட்டுத் தெருவை பெருக்கும்
  எங்க குருவம்மா கொண்டையா
விட்டு விட்டு போனால்
   வீசும் வாசனை என்னய்யா
துட்டு வேணுமா தாறேன்
   துடைப்பம் பிடிச்சு பாரேன்
முட்டுச் சந்து தெருவில்
   மூச்சடக்கி வாழ்வோம் வாயேன்

விளையாட்டு




ஒரு குடம் நீரூற்றி
ஒரு பூ பூக்க
ஒரு கூட்டம் சேர்ந்தது - அது
ஒரு காலமானது

ஆலமர ஊஞ்சலாடி
ஆங்கே தும்பி பிடிக்க
காயா பழமா என்று
ஓயாது விளையாடிய நீ

ஓடிப் பிடித்து
ஒளிந்து விளையாடியது
ஒரு காலமென
ஓய்ந்து போகாதே

தேடிப் பிடித்து
தேவையென அறிந்து
மனிதர்களோடு உறவாடி
மகிழ்ந்து விளையாடு

கூட்டாஞ் சோறு
மணல் வீடு
உப்பு மூட்டை
உனக்கானதே

கொலை கொலையா முந்திரிக்கா
திருடன் போலீஸ்
வகை வகையான விளையாட்டுகள்
வாழுமிட மெங்கே

மழைக் காலத்தில்
மடித்த காகிதம்
கப்பலேறி விட்டதோ
கனவாகி விட்டதோ
  
நூங்கு வண்டி
கில்லி தாண்டு
கோலி விளையாட்டு
காலியாகி போனதோ

மாஞ்சா நூலில்
மடுவங் கரையில்
மாலையில் விட்ட பட்டம்
மறைந்து போனதே

ஆறு குளமென்றும்
கிணற்று வெளியிலும்
குதித்து நீச்சலடித்தது
வரண்டதோ - காவேரியா

பலிஞ் சடுகுடு
குதிரை தாண்டுதல்
பம்பரம் சுற்றியது
நின்று போனதே

ஆடுபுலி யாட்டம்
தாயக் கட்டை
சொக்கட்டான்
பரமபத மடைந்ததோ

கைப்பந்து கால்பந்து
கூடை பந்து
கைப்பற்றியது
மட்டைப் பந்து

மல்லர்கள்
சிலம்பச் செல்வர்கள்
வில் வித்தையாளர்கள்
இராமனைத் தேடிச் சென்றனரோ
  
இளவட்ட கல்தூக்கி
மஞ்சு விரட்டி
வழுக்குமர மேறி
உரியவளை கைப்பிடிக்க

தட்டாங்கல், தாயம்
பல்லாங் குழி என
பாவை விளையாடியவை
நொண்டியானதோ

கிச்சு கிச்சு தாம்பளம்
குரவை யாட்டம்
கரகர வண்டியேறி
காணாமல் போனதோ

அக புற விளையாட்டுகள்
பருவ பாலினத்திற்கேற்ப
அந்தோ அவையாவும்
அன்ட்ராய்டு விளையாட்டாய்

செல்பேசி விளையாட்டில்
ஜெயிக்க முடியாதாம்
சிலிர்த்து கொண்டனர்
சிறுவனின் பெற்றோர்

டெம்பிள் ரன்
புளு வேல்
காம்பட் பைட்
கணிப்பொறியில் சிக்கியது

ஓட்டி உறவாடுவது
எட்டிப் போனது
சுட்டி டிவியும்
வெட்டிக் கதை பேசுது - ஆக

எல்லோரும் கூடி
எக்காளமிட்டு விளையாடும்
எங்கள் பண்பாடு
என்று மீளும்



வியாழன், மார்ச் 1

நீதி மய்யம்


அரிதார மய்யம்
அரசியல் மய்யமாகுமோ
பரிதாபக் கூட்டம்
பகல்கனவுக் காணுது

கருப்பும் சிவப்பும்
கலந்துச் செய்த
கலவைத் தானென
கட்டியம் கூறுகின்றான்

காவி அபாயமென்றால்
ஊழல் ஒழிப்பென்னென்கிறான்
எங்ஙனம் என்றால்
ஏதோதோக் கூறுகின்றான்

சம்பளம் பாக்கிக்காரன்
சினிமாவில் சம்பாதித்தானாம்
அரசியலில் சம்பாதிக்க
அவசியமில்லையாம்

ஊதிப் பெருக்கி
உத்தம வில்லனை
உங்கள் மனங்களில்
உரமிட்டாகி விட்டாச்சு

திங்கள் கழித்து
தீர்ப்பும் எழுதுவீர்கள்
தப்பித் தவறி
சிம்மாசனத்தில் அமர்ந்தாலும்

ஏ...... சமூகமே
ஏமாந்தது நீயாகதானிருப்பாய்
எதுவும் மாறாது
எடுப்பான முகம்தவிர

சின்னாள் கழிந்து
சித்ரகுப்தக் கணக்கில்
சிகரத்தில் என்பாய்
சீட்டுக் கட்டு விழும்போது

விஞ்ஞான ஊழல்லென்று
வியாக்கியானம் சொல்வாய் - ஆக
வேறுமுகம் தேடாதே
வேறுவழித் தேடு......

வெள்ளி, ஜனவரி 26

செக்சி துர்கா



முருகனை அழைக்க
அழகு நாமங்கள்
அவரவர் விருப்பமாய்
118 இருப்பதாயும்

சுடுகாட்டானை
சுட்டும் பெயர்கள்
சுமார் ஆயிரம்- ஆயின்
சொரூபம் ஒன்று

அகிலாண்டேஸ்வரியை
அன்பாய் அழைக்க
அவர்களிட்டப் பெயர்
ஆயிரமல்ல 150

குலம்காக்கும் எம்மவர்கள்
அய்யனாரென்றாலும்
எந்த அய்யனென்று
எடுப்பாய்ச் சொல்வர்

பேச்சி, இசக்கி
பச்சையம்மாள், முனியம்மாய்
இரட்சித்தவர்கள் என்பதால்
இரகரகமாய்ப் பெயரில்லை

விடுதலை, சுதந்திரம்
வேறுபாடின்றி
வைத்தப் பெயர்கள்
யாருக்குச் சிக்கல்

சுட்டும் பெயரொன்றை
சூட்டியக் காரணத்தால்
வெட்டும் கூட்டமொன்று
காட்டுக் கத்தல் கத்துகிறது
  
இல்லாததை இருப்பதாகவும்
சொல்லாததைச் சொன்னதாகவும்
நடக்காததை நடந்ததாகவும்
நாடகம் நடத்துகின்றனர்

பாத்திமா, மேரியை
பார்த்தாயா அப்படி
பாராள்பவளை – படமிட்டு
பார்க்கலாமா என்கிறான்

சௌந்தர்ய லகரியில் – சங்கரன்
சொக்கிப் பாடுகிறான் – சொக்கன்
சும்மாயிருந்தான் – பக்தாள்ஸ்
சனல் சசிதரனை வாட்டுவதேன்?!!...

செவ்வாய், ஜனவரி 2

சும்மா அதிருதில்ல


அந்த அறிவிப்பால்
சும்மாவாது
அதிர்ந்ததா?...

வாய்ச் சவடாலில்
வந்துட்டேனுச் சொன்னதால்
வாசல் திறந்திடுமா

ஏமாற்றும் கூட்டத்தின்
எண்ணிக்கைக் கூடியதாக
இனம்காண் தமிழகமே

ஜகத்குரு, நித்தி
ஜக்கியின் ஆன்மீகத்தை
ஜனநாயகமாய் கண்டோம்

மரபுகளை மாற்றி
தியேட்டரில் கேசட் விற்றவன்
கேப்பையில் நெய் வடியுமென்கிறான்

எதுச் சரி
எதுத் தவறென
ஏதும் அறிவிக்காமல்

இறங்கி வந்த
இறை தூதனா?!!
எதை மாற்றுவான்

கோடிகளில் புரண்டு
கேமராமுன் வசனம் பேசி
நாடாள வருவேனேன்றால்

சன்னி லியோனை
சட்டமன்ற உறுப்பினராக்க
சான்றொப்பம் அளிப்பாயோ?

ஓடுறக் குதிரையென
நோட்டைப் புடுங்கினவன்
ஓட்டைக் கேட்கிறான்

ஏலமெடுத்த டிக்கட்டை
எவனும் வாங்காததால்
எறிந்தாயேக் குப்பைத் தொட்டியில்

மறக்காத வடுவது........
கறக்கலாமென நினைத்தால்
காலமாவது நீதான்

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...