வெள்ளி, டிசம்பர் 30

அண்ணன் - தம்பி- கடன்


கடந்த இரண்டு நாட்களாக, வியாபார காரணங்களுக்காக பிரிந்த அண்ணன் தம்பிகள், குடும்ப நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்தனர். எந்த செய்தி தாளை எடுத்தாலும் இது முன்பக்க செய்தியாக இருந்தது.  ஆம் திருபாய் அம்பானியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பிறந்த கிராமத்தில் குடும்பமாக சந்தித்துக் கொண்டனர் முகேஷ், அனில் மற்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதிரிகள்

மேலே உள்ள பட்டியல் அண்ணன் பொது துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன்.  இது சுமார் ரூ.7000 கோடி என பட்டியல் சொல்கிறது.

எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு முதலீடாக செலுத்திய தொகை இதில் இல்லை.  இது தவிர எண்ணற்ற பொதுமக்கள் சிறுதொகையாக பங்கில் முதலீடு செய்துள்ளனர்.

இப்படி அடுத்தவர் பணத்தில் சாம்ராஜ்யம் நடத்து சாமர்த்தியம் யாருக்கு வரும்.  அரசு அதற்கு துணை நிற்கிறது.

மேற்கண்டது அண்ணனின் கதை மட்டுமே.  தம்பியின் கதை தனிக் கதை.

புதன், டிசம்பர் 28

பாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை


பாரமவுண்ட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடன் விவரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.  இதன் படி ரூ.437 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.   ஆனால் உண்மையில் வங்கிகளுக்கு ரூ.2000 கோடி செலுத்த வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது,

இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால்,  மேற்கண்ட இக்கடன்களுக்கு எந்தவித ஈட்டுறுதியும் அதாவது எந்தவிதமான அசையா சொத்தும் கடனுக்கு ஈடாக கொடுக்காமல் பெற்றுள்ளது.

கல்வி கடன் ரூ.10 லட்சம் வேண்டுமென்றால் 1008 விதிகள், கண்டிப்பாக அசையா சொத்து ஈட்டுறுதி வேண்டுமென்று கேட்கும் வங்கிகள் எப்படி இக்கடனை வழங்கியது.

ஓ அதனால்தான் இந்த முறைகேடை விசாரிக்க அனைத்து வங்கிகளும் சி.பி,ஐ விசாரிக்க பரிந்துரைத்து விட்டு அமைதியாக இருக்கின்றன. சி.பி.ஐ.  விசாரித்து ஏதாவது பணம் வசூல் ஆகியுள்ளதா சொல்லுங்கள் மக்களே

செவ்வாய், டிசம்பர் 27

குங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்

கடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன்.  உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.

எதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.

கூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.

தசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார்.  அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.

அசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.

பூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாளை நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர்.  பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார்.  அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.

சொல்லுங்கள்

குங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா

101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா



புதன், டிசம்பர் 14

மன்மோகன் சிங்

நண்பர் அனுப்பி வைத்த மின்னஞ்ஞல், படியுங்கள், ரசியுங்கள்


Prime Minister Man Mohan Singh walks
into State Bank of India to cash a cheque. As he approaches the cashier
he says: 'Good Morning, Ma'am, could you please cash this cheque for me?'

Cashier: 'It would be my pleasure, Sir.
Could you please show me your ID?'

PM: (utterly shocked) 'I did not bring
my ID with me as I didn't think there was any need. I am Man Mohan Singh,
THE Prime Minister of India!'


Cashier: 'Yes Sir, I know who you are,
but with all the regulations and monitoring of the banks because of impostors
and forgers, etc., I must insist on seeing your ID.'


PM: 'Just ask anyone here at the Bank
who I am and they will tell you. Everybody knows who I am!'


Cashier: 'I am sorry Mr. Prime Minister,
but these are the bank rules and I must follow them strictly.'


PM: 'I am urging you, please, to cash
this cheque. Soniaji has gone to America and Rahulji has, by mistake, taken
the keys of the safe with him. I need some extra spending money urgently.'


Cashier: 'Look Mr. Prime Minister, this
is what we can do. Some months back, Baba Ramdev came into the bank without
ID. To prove he was Ramdev, he pulled his tummy in so much that it went
and touched his back. With that feat, we knew him to be Baba Ramdev and
cashed his cheque. On another occasion, Yuvraj Singh came in without his
ID. To prove his identity, he just went out and hit six consecutive sixers.
With that we knew for certain that he was indeed Yuvi himself, and we cashed
his cheque. So, Mr. Prime Minister, what can you do to prove that it is
you, and only you, as the Prime Minister of India?'



PM stood there thinking, thinking and
thinking, and finally said: 'Honestly, my mind is totally blank ~ there
is nothing that comes to my mind... I can't think of a single thing!!!'



Cashier: 'There you are! That is enough. Now I don't have any doubt
that you are our Prime Minister Dr.Man Mohan Singh.
In what denominations would you like the cash, Mr. Prime Minister?

செவ்வாய், டிசம்பர் 6

பொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்

நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது.

காரணம்

வழக்குகளால் கால விரயம் ஏற்படும், மேலும் நீண்ட நாட்கள் இதற்கு ஏற்படும். மேலும் முதலீட்டாளர்கள் பாதிக்கபடுவார்கள்.  ஆம் எந்தவொரு வழக்கும் மேற்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பை பாதிக்கும்.  அப்பாதிப்பு சிறு முதலீட்டார்களான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  ஆம் அவர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்த பணம் காணாமல் போய் விடும்.  எனவே நடவடிக்கை கைவிடப்பட்டு வேறு நிவாரணங்கள் பரிசீலிக்கப்படுகிறது.


எதற்காக

கோதவரி படுகையில் அதாவது KG-D6 என்னுமிடத்தில் குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் அந் நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை.  குறைவாகவே உற்பத்தி செய்து நட்ட கணக்கு எழுதியுள்ளது.    இதனால் ஏற்பட்ட நட்டதிற்கு அபராதத் தொகை வசூலிக்க கடிதம் அனுப்பபடுகிறது.  அதற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடிதத்தால் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.


இதே விஷயம் தொடர்பாக அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையிட்டு கொள்ள உச்ச நீதி மற்றம் தலையிட்டு தீர்த்து வைத்தது ஞாபகம் இருக்கலாம்.  


இந்த திட்டத்திற்கு  ஏற்கனவே ஏறக்குறைய ரூ.9000 கோடி செலவிட்டுள்ளதாக கணக்கெழுதி வைத்துள்ளது ரிலையன்ஸ்.   2 மில்லியன் வாயு எடுக்க வேண்டிய இடத்தில் 1 மில்லியன்தான் எடுக்கிறார்கள்.  ஆனால் செலவு..............


2000 ஆம் ஆண்டில் லைசென்சு பெற்ற ரிலையன்ஸ் இன்னும் லாபம் எதுவும் அரசு செலுத்தவில்லை.   அரசு இன்றுதான் நட்ட கணக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.  ஏன் தெரியுமா கள்ள கணக்கு.  முதலீட்டில் ஒரு பகுதி எடுக்கும் வரை அரசுக்கு எவ்வித லாபத் தொகையும் செலுத்த தேவையில்லை என்பது ஒரு விதி.


இந்த துரப்பன பணிக்காக பல்வேறு சலுகைகள் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்போதும் சலுகை பெற்றுள்ளது


ஆம் மக்களே உங்கள் பெயரால்

ரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நம் முதலாளிகள் ரூ.10 கோடி அதற்கு மேல் வாங்கிய கடன் 14 இலட்சம் கோடியாம்.  வாங்கியவர்களின் எண்ணிக்கை 22500.

ரூ.10 கோடி அதற்கு மேல் கடன் வாங்கிய 700 பேர், ஏறக்குறைய ரூ. 26000 கோடி கட்டாமல் எவ்வித தொல்லையுமில்லாமல் அதாவது வழக்குகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் 3400 வழக்குகள் ரூபாய் ஓரு கோடி அதற்கு மேல் பெற்ற கடனுக்காக கடன் வசூல் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ளது.   இதன் மூலம் வர வேண்டிய தொகை ரூ.21,400 கோடி.

கடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகள் அத்தோடு விடுவதில்லை, வேறொரு நிறுவனம், வேறொரு வங்கி என எமாற்றிக் கொண்டுதான் இருகின்றனர்.

 CIBIL: Credit Information Bureau (India) Limited என்ற நிறுவனம் இவர்களை பற்றி தகவலை சேகரித்து வைக்கிறது.  இத்தகவலை பாதிக்கப்பட்ட வங்கி அளித்தால்தான் இதன் தகவல் பெட்டகத்தில் பார்க்க முடியும்.  ஆனால் எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்வதில்லை.  அதுவும் ஆளுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்கின்றன.

அரசியல் பின்புலம்,  பணம், ரவுடியிசம் இவைகள் வங்கி அதிகாரிகளை கட்டி போட வைக்கின்றன.  ஒன்று அவர்களுக்கு சதகமாக நடக்க வைக்கிறது அல்லது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

வங்கியின் கடன் 1993 வரை பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  1993 க்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  வங்கிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கடனுறுதி மற்றும் மறுசீரமைப்பு சட்டம் 2002 (SARFAESI ACT 2002)  இயற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயினும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.

ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்ட கடனில் ஏதேனும் தவறுகள், குற்றங்கள் நடைப்பெற்றால் சி.பி.ஐ க்கு அதன் விவரம் அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மறந்து விடுவார்கள்.  அவர்களை பொறுத்தவரை அது சிபிஐ விவகாரம்.  முதலாளிக்கு ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ விசாரணை. கைது கண்டிப்பாக இருக்காது.  ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் பணம் வசூலிக்க வழியில்லை.

குற்றவியல் நடவடிக்கை,(criminal action)  வங்கியால் எல்லா கணக்குகளிலும் நடைபெறுவதில்லை.   அவ்வாறு மேற்கொண்டால் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு தடைபடும்.  அதாவது அவர்கள் கடன் வழங்கும் போது அளவுக்கு அதிகமான கேள்விகள், ஆதாரங்கள் கேட்டு கடன் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள்.   ஏனெனில் பின்னால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால்.

அதனால் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர் கடனை திருப்பி செலுத்தலாமா வேண்டாமா? எவ்வளவு செலுத்த வேண்டும்.  தள்ளுபடி எவ்வளவு கோரலாம்?  மத்திய வங்கியின் வழிகாட்டுதல் என்ன?

எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.  நாம் வீட்டுக் கடன், கல்வி கடன், விவசாய கடன், தனிநபர் கடன் வாங்கி வீட்டை, விவசாய நிலத்தை இழந்து நிற்கும் அப்பாவிகள்

யார் நல்லவர்கள், எல்லாம் இழந்து அப்பாவியான நாமா, எதையும் இழக்காமல் பொது மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்ட முதலாளிகளா

திங்கள், டிசம்பர் 5

MNC in retail

It is an old agenda but implemented now. Whether people of india supporting or agitating it will  be implemented .
Can we stop eating
No then it is needed

Present retail system providing food but you will have to cook

If MNC allowed in retail you need not go to restaurant. Packed food  readily available in retail shops

Yes we need MNC retail shop

Otherwise who will do all these silly works.


Sent from BSNL with my BlackBerry® smartphone

வியாழன், நவம்பர் 24

பணத்தோட மதிப்பு

நண்பர் அசோக்குமார் அனுப்பி வைத்த மின்னஞ்ஞல்.  சரியா தவறா கருத்து சொல்லுங்கள்

YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS:- 

Please spare a couple of minutes here for the sake of India. 


I got this article from one of my friend
s, but it's true. I can see this in day to day life.

Here's a small example:- 

Before 
12 months 1 US $ = IND Rs 39
After 
12  months, now 1 $ = IND Rs 50

Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.


Our economy is in your hands....

 
INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.

More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.


A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.


We have nothing against Multinational companies, but to protect our own interestsm we request everybody to use INDIAN products only atleast for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future. 


What you can do about it?


1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....


Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.


All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.


LIST OF PRODUCTS

COLD DRINKS
:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...


INSTEAD OF
  COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP
:- 
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA 


INSTEAD OF  LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE
:- 
USE  NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK


INSTEAD OF  COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT


TOOTH BRUSH
: - 
USE PRUDENT, AJANTA , PROMISE


INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B


SHAVING CREAM
:- 
USE GODREJ, EMAMI


INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE
:- 
USE  SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA


INSTEAD OF  SEVEN-O -CLOCK, 365, GILLETTE
 

TALCUM POWDER
:- 
USE  SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF  PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER
:- 
USE  INDIANA, AMUL, AMULYA


INSTEAD OF  ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO
:- 
USE  LAKME, NIRMA, VELVETTE
 

INSTEAD OF  HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE
 

MOBILE CONNECTIONS
:- 
USE BSNL, AIRTEL
 

INSTEAD OF HUTCH


Food Items
:- 
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma
 

INSTEAD OF  KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W


Every
 INDIAN product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today. 

BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products.


WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.

MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?
 

PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE


RUSSIA, S.KOREA, MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY!
 

We would be sending useless forwards to our friends daily. Instead, please forward this mail to all your friends to create awareness. 

"LITTLE DROPS MAKE A GREAT OCEAN."
PLEASE TRY TO BE AN INDIAN

புதன், நவம்பர் 16

மணம் நாடும் மனம்


காதலன் என்னிடம்
  கொண்டாயோ கரிசனம்
ஆதலின் எமக்கு
  அளித்தாயோ தரிசனம்
பார்வை தீண்டிட
  பெற்றேன் விமோசனம்
தீர்வை கண்டிட
  தாராயோ அரியாசனம்

திங்கள், நவம்பர் 14

மல்லையாவும் கிங் பிஷ்ஷர் நிறுவனமும்

நாட்டில் எல்லா முதலாளிகளும் சொந்த காசில் நிறுவனம் ஆரம்பித்து நட்டப்பட்டு தலையில் துண்டு போட்டு கொண்டனர் என நம்பும் மக்களுக்காக

மேலே உள்ள பட்டியல் கிங் பிஷ்ஷர் நிறுவனம் பல்வேறு சமயங்களில் பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தான் கடன் பெற்றுக் கொண்டதற்கான பத்திரத்தை நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்பித்தவை.


பொதுமக்கள் யாரும் இத்தகவலை www.mca.gov.in  என்ற தளத்தில் சென்று தன் பெயரை பதிவு செய்து இத்தகவலை தெரிந்துக் கொள்ளலாம்.


சற்றேறக்குறைய ரூ.10000 கோடி கடன் பெற்றுள்ளது அந்நிறுவனம்.  அதற்கு சில காலம் வட்டி செலுத்தியுள்ளது.  சிலகாலம் வட்டி செலுத்தவில்லை. தற்போது அசலே கேள்விக்குறி


யாருடைய பணம் இந்த ரூ.10000 கோடி,  வங்கிகளில் பொதுமக்கள் இட்ட வைப்பு தொகைகள்.  பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி, அதன் இன்னொரு பிரிவு ரூ,5000 கோடி பாருங்கள் எத்தனை நிறுவனங்களிடம் கடன்.


வீடு வாங்கினால் பறிமுதல், டிராக்டர் வாங்கினால் பறிமுதல், தனிநபர் கடன் வாங்கினால் வீடு தேடி ஆள் வருகிறார்கள்.


ஆனால் மல்லையா பிரதம மந்திரியை சந்தித்து தள்ளுபடி செய், கடன்களை மாற்றி அமை, மேலும் கடன் கொடு என சொல்கிறார்.


யாருடைய ஆட்சி மக்களே, சிந்தியுங்கள்

ராகுல் பஜாஜ் சொல்லி விட்டார் மல்லையா சாகட்டும் என்று, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

அடிமைகளுக்கு சுயமரியாதை

முன்னாள் அரசவை தலைவர் எதற்காகவோ அமெரிக்கா சென்று திரும்பும் போது அவமரியாதை செய்து விட்டார்கள்.

யார்? அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்.

இந்தியாவிலேயே ரம்பர் ஸ்டம்பு, அமெரிக்கா போய் வாய் திறக்குமா?

அங்கே மௌனமாக சகித்துக் கொண்டிருந்து விட்டு இங்கு வந்து புலம்பியிருக்கும் போல் தெரிகிறது.  அதற்கு இப்போது அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் குதிக்கும் செயல் இருக்கிறதே....  வேறு மொழியில் சொல்வது என்றால் சவுண்ட் வுடறது......

ஒருவர் சொல்கிறார்,  அமெரிக்க மாமாக்கள் இங்கே வரும் போது இதுபோன்றே நடந்து கொள்வோம்

அமெரிக்க மன்னிப்பு கேட்க வேண்டும்

உண்மை என்னவென்றால் அமெரிக்க நாய் வந்தால் கூட அஃகுவாஃபினா தண்ணீர், அவனோட ஏரோபிளேன் வந்தா இந்திய நாய் கூட மோப்பம் பிடிக்க முடியாது. உள்ளூர் போலீஸ் எல்லாம் ஒரு காத தூரம்,  அவன் ஊருகுள்ள வருவதே தனி வாசல்.........




ஆனால் சவுண்டு


ஆம் அடிமைகளின் சுயமரியாதை இவ்வளவுதான்

சபாஷ் சரியான போட்டி

பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் கிங் பிஷ்ஷர் நிறுவனத்திற்கு எவ்வித நிதி உதவியும் அரசு அளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.  எந்தவொரு தனியார் நிறுவனமும் நிதி தடுமாற்றத்தால் இறக்க நேரிடும் என்றால் இறக்கட்டும் என திருவாய் மலர்ந்துள்ளார்.

நுகர்வோர் மற்றும் பணியாளர் நலன் கருதி அரசு நிதியுதவி செய்ய வேண்டுமென பிரதமர் அலுவலம் வரை சென்றுள்ளார் மல்லையா.  ஆம் இவரின் சாராய கம்பெனிகள் கொழுத்த இலாபம் ஈட்டுவதால் அரசுக்கு கொடுக்க வேண்டிய வரியைக் காட்டிலும் அதிகமாக அதாவது லாபத்தில் கூடுதலாக ஏதாவது கொடுத்தாரா?


கேளிக்கை ஒன்றே வாழ்க்கையென வாழும் இவருக்கு நுகர்வோர் மற்றும் பணியாளர் மீது அக்கறை என்பது நரி எதற்கோ அழுதது என்பது போலதான்

வெள்ளி, நவம்பர் 11

ஓர் எழுத்து


பெயர் மாற்றினால்
பெரும் மாற்றம் நிகழுமென
பேதலித்த சிலர்
மாற்றிப் பார்த்தனர்

இடர் தொடர்களுக்கு
இட்ட பெயர் காரணமென
இடை யெழுத்து சேர்த்து
  மாற்றிப் பார்த்தனர்

வெற்றிக்கு வழியென்று
வெட்டியும் நீட்டியும்
வைத்த பெயர்
ஆங்கிலத்தில்

மாற்றிய பெயரால்
மாறியதோ வாழ்க்கை
மானுடமே
மறைக்காது சொல்

வியாழன், நவம்பர் 10

ஐயர்களின் தமிழ்நாடு

அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது.  நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்படி பிரித்திருக்கிறார்கள்.  அதற்கு விளம்பரமும் அப்படி செய்திருக்கிறார்கள்.

ஆம் ஐயர்களின் தமிழ்நாடு, பேனர்ஜிகளின் பெங்கால்


ஓன்று தெளிவாகிறது. அவர்கள் ஐயர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். அல்லது ஐயர்கள் இருக்குமிடத்தில் மற்றவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு இது மற்றொரு சாட்சி.

கிழக்கிந்திய கம்பெனிக்கு பதில் PAY PAL,


தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கடிதம் பெற்றுள்ளனர் நிறுவனத்திடமிருந்து.

அவர்கள் அப்படிதான் நாம் மாற்றுவோம்.

பின்குறிப்பு : ஓ மறந்து விட்டேன் நடப்பது பாப்பாத்தியின் ஆட்சியல்லவா

புதன், நவம்பர் 9

பரிசோதனைக் கூட எலிகள்


அறுபத்தி நான்கு கூறு
முப்பரிணாம வடிவம்
மூச்சிருக்கும் பையை
முற்றிலும் அறிந்திட
ஆறறிவு மனிதனின்
அறிவியல் கண்டுபிடிப்பு

சமச்சீர் சத்துணவு
சமமாய் அனைவரும்
சாப்பிடாததால்
ஊட்டச் சத்து குறைவுக்கு
சத்துணவு திரவமாய்
அதுவொரு கண்டுபிடிப்பு

நுண்ணுயிர் கிரிமியின்
நூதன நோயால்
நொந்து கொண்டிருக்க
மரபறிந்து மருந்துகள்
மாமனிதன் கண்டுபிடித்தான்

எட்டும் நோயெல்லாம்
எட்டாது வைக்க
எல்லோராலும் இயலையே
துட்டு இருப்பவனக்கு
தூரமாயும்
ஏதுமில்லாதவனக்கு
எமனாயும்

கண்டுபிடிப் பெல்லாம்
காசுள்ளவனுக்கே
காசு பண்ண
களம் வேண்டும்


களப்பணி செய்ய
கயவர்கள் வேண்டும்
கயவர்கள்
நல்லவர்களாக வேண்டும்

ஆரூடன் பார்பவனும்
ஆண்டவனை நம்புவனும்
அடுத்து நம்புவது
மானுடம் காக்கும்
மருத்துவனை

இரண்டு நான்காகும்
நான்கு எட்டாகும் – கணக்கிலே
இன்றே கோடிஸ்வரனாக……..

இளநிலை முடிக்க
இருபது இலட்சம்
முதுநிலை செல்ல
முக்கால் கோடி
முன்பின் பட்டயம் சேர்க்க
பின்னும் சில லட்சம்

அத்தனையும் ஆனபின்பு
அயல்நாட்டு பட்டயம்
அறிவிருக்கு என்பதற்கு
அதுவொரு சான்று

இத்தனையும்
எடுப்பது எப்படி –திரும்ப
எடுப்பது எப்படி
கனவுற்றிருந்தேன்

கதவு தட்டுமோசை
காத்திருந்த நோயாளியோ
அல்ல
காசளப்பதாக வந்தானொருவன்
கடைசியாய்
கமிஷன் தருவதாக சொன்னான்

வழி கிடைத்தது வாழ
வட்டி கிடைத்தது அசலுக்கு
அடுத்தோர் ஓசை
ஆம். நோயாளியேதான்

தலை சுற்றலென்றான்
தடுமாற்றாம் என்றான்
பழக்க வழக்கம்
பரம்பரை தன்மை
பலவும் கேட்டேன்

எதோதோ எழுதினேன்
எனினும் ஒரு
சிடி ஸ்கேன்
எழுதிக் கொடுத்தேன்

அச்சடித்த ஒரு தாளில்
வகைவகையாக
சோதனை முறைகள்
அதிலிருக்கும் விலாசத்தில்
அதனை செய்திட
அறிவுறுத்தினேன்

அப்படியே ஒரு
அறிவிப்பும் செய்தேன்
அவசரமில்லை
பணம் வந்தவுடன்
செஞ்சிட்டு வாங்க
அதுவரை – மருந்து
சாப்பிடுங்கள்

வலியின் தன்மை அறிய
வட்டிக்கு வாங்கியாவது
சிடி ஸ்கேன் எடுத்திடுவான்
பிறகே தூங்கிடுவான்

ஒன்றுமிலை
என்றொரு செய்திக்கு
மூலதனமிட்டவனக்கு
முக்கால் பங்கு

முக்காலுக்கு வழி
சொன்ன எனக்கு
கால் பங்கு –

எனவே நீங்கள்
பரிசோதனை எலியல்ல
படியளக்கும் தெய்வம்


குறிப்பு நேர்மையற்ற மனிதர்களை கண்டதால் இவ் வரிகள், நேர்மையுள்ள மனிதர்களையும் கண்டிருக்கிறேன்.  அவர்கள் மன்னிக்க

செவ்வாய், நவம்பர் 8

அணுவும் கோமாளியும்

ஆரூடம் சொல்ல
  அரசவை கோமாளி வந்தார்
போரிடும் மக்கள்
  போக்கை மாற்றிட சொன்னார்
மாறிடும் உலகின்
  மகத்துவம் அணுஉலை என்றார்
நேரிடும் இழப்பை
  நிகழா என்றுரைத்து சென்றார்

வளர்ந்த நாடுகள்
  வகைமாறி மின்சாரம் தயாரிக்க
வளரும் இந்தியாவில்
  வாய்த்தது அணுஉலை என்றே
தகைசால் அமைச்சரும்
  தருமமிட்ட ருஷ்யாவும் சாற்றிட
முறையா முடங்கிட
  முதலாய் புறப்படு எதிர்த்திட

பொருளாதார தடையென
  பொல்லா எச்சரிக்கை மக்களே
அருள்வேண்டி அன்னிய
   அரசை அண்டிட தேவையோ
இருள்விலக சிக்கிமுக்கி
  இன்னும் சிலவழி யுண்டு
மருளா திருந்தால்
  மானுடம் செழித்திடு மிங்கு
  
பேரிடரென்று  பேரிகையிடு
  பெரிய போருக்கு தயாராகு 
கூறட்டும் அணுகுப்பை
  கொட்டுமிடம் எங்கே யென்று
தடங்கல் அணுவுக்கென
  தரணி யெல்லாம் முழங்கு
கூடங்குளம் குறியீடாய்
  கொள்ளட்டும் உலக மிங்கு

திங்கள், நவம்பர் 7

6 ஆம் அறிவு

தோழர் கலையரசனின் 7 ஆம் அறிவு திரை விமர்சனம் படிக்க நேர்ந்தது.   வலையில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இத்தோழருடைய விமர்சனம் ஆதாரங்களுடன் உண்மையாக தெரிந்தது.  விமர்சனத்தை படிக்காதவர்கள் 7 ஆம் அறிவு விமர்சனம்  இங்கு சென்று விமர்சனத்தை விரிவாக பார்க்கவும்.

அதன் ஆதாரமாக சீன மொழியில் ஏற்கனவே வந்த திரைபடத்தை இதில் காணவும் போதி தர்மர்- சீனமொழிப் படம்


வியாழன், நவம்பர் 3

ஆனந்தம்

மகளையும், மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன்.  மகள் சொன்னாள், I am happy மகன் சொன்னான் I have bad news.    என்னவென்று கேட்டேன்.

மகள் சொன்னாள் அவளுக்கு மதிப்பெண் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை என ஆசிரியர் சொன்னதாகவும் ஆனால் அப்பட்டியலை பெற்றொரிடம் காண்பித்து இரண்டு நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்களாம்.

90 க்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது இரண்டு நாட்கள் தள்ளி கையெழுத்து போட்டு அடுத்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற உறுதி மொழி பெற்று கையொப்பம் இட்டு வந்தேன் கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நிலை என் மகள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள்.

படிப்பு என்பது ஒரு துன்பமான நிலை என்பதால் இந்த மகிழ்ச்சி என நினைக்கிறேன்.

மகனுக்கு Reading Exam (படித்தல்),  அவன் சரியாக படிக்காததால் 'C'  Grade   அளித்தார்களாம்.  அது எனக்கு கெட்ட சேதி,

ஆம் அவனை படிக்க பழக்க வேண்டும்

சனி, அக்டோபர் 29

புரட்சி


புரட்சித் தலைவர்
புரட்சித் தலைவி
ஆம் உங்களுக்கு
புரட்சி தெரியும்

வச்சாத்தியும்
மகாமக குளமும்
பரமக்குடியும்
நேற்றின்றைய புரட்சிகள்

லிபியாவிலும்
புரட்சிப் படை
42 ஆண்டுகள் ஆட்சியை
அகற்றியது

புரட்சியால்
புதிய உலகமானதோ
மாற்றங்களால்
மக்கள் மகிழ்ந்தனரோ

குமுதம், ஜூவி.போல்
சன், மிரர், கார்டியன்
நேட்டோவின், அமெரிக்காவின்
புகழ் பாடின

ஊழல் செய்தாலும்
போலீஸ் கொன்றாலும்
சட்டம் ஒழுங்கும்
மனித உரிமைகளும்

காக்கப்பட்டதாக
காகிதத்திலும்
காணொளி செய்திகளிலும்
நீலிக்கண்ணீர் வடித்தனர்

போர் முடிந்தது
செய்திகளும் முடிந்தது
ஆனால்
உண்மைகள்

கஷ்மீரத்திலும்
இலங்கையிலும்
லிபியாவிலும்
நுகர்வு பொருள்- பெண்கள்

ஆப்ரிக்காவின் வடக்கு
அரபுகளின் தேசம்
ஆயினும் கருப்பர்கள்
அத்தேசத்தை கட்டியமைத்தனர்

புரட்சியால் கருப்பர்கள்
புலம் பெயர்ந்தனர் – ஆம்
பாப்பாத்தியின் ஆட்சியில்
சூத்திரர்கள் வாழ முடியுமா?

அகதி முகாமென்பது
பெண்களுக்கானது
வீரப்பன் வேட்டையில்
வச்சாத்தியும் அப்படியே

போரிலும்
போருக்கு பிந்தியும்
துப்பாக்கி முனையில்
பெண் போகப் பொருளானாள்

போருக்கு பிந்திய
லிபியா
புரட்சியின் தலைமையிலிருக்கும்
தமிழகம்

போர்டும், ஹுண்டாயும்
போட்டியிடுவதை போல்
அமெரிக்க, சீன
எண்ணை நிறுவனங்கள்

அம்பானியை கண்டுபிடிக்கலாம்
அங்கொரு கையாளாக
அள்ளஅள்ள குறையா
எண்ணையை சூறையாட

என்ன செய்வோம் தமிழர்களே
லிபியாவும் தமிழகமும்
ஒன்றென
நிம்மதியாய் தூங்குவோம்








வியாழன், அக்டோபர் 27

மாயக்கல் மோதிரம்


அயல்நாடு சென்று
ஆயிரமாயிரம் சம்பாதிக்க
அதிர்ஷ்ட மோதிரம்
ஆவண செய்தால்
அவனவன் ஏழையாயிருக்க
ஆமோதிப்பானா

மலடியென பேரெடுக்க
மானுடம் விரும்புமா
மாயக்கல் மோதிரம்
மழலையை வழங்குமென்றால்
மாதர்தான் எதற்கு-திரு
மணம்தான் எதற்கு

செவ்வாய் என்பது
நாளும் கோளூமாகும்
வருவாய் தேடுபவர்க்கு
தோஷமாகும்
இயலாமைகளுக்கு – அது
மற்றொரு வேஷமாகும்

காணி நிலம் வாங்க
கல் மோதிரம்
கருணையளித்தால்
பராசக்தியிடம் வேண்டிய
பாரதி கூட
பாதை மாறியிருப்பான்

வீடு கட்ட
வேண்டும் பணம்
வேதனையப்பா – இதில்
வேகத்தடையாம்
விலக்குதாம்
விவராமான மோதிரம்

தொழிலில் தேக்கமெனில்
தவறுகள் ஏதுமிருக்கலாம்
மோதிரம் அணிந்து
மொட்டை போடுவாயா
தவறை திருத்தி
சாதனை செய்வாயா

வாழ்க்கை துணைத் தேட‘
வண்ணகல் மோதிரம்
வழி செய்யுமென்றால்
வரதட்சணை எதற்கு
விவாகரத் தெதற்கு-அட
வாலிப மெதற்கு

அவனிவன் அணிந்து
ஆகாவென்று ஆனான்
அதெல்லாம் கட்டுக்கதை
அந்த மோதிரம்
விற்ற கடை
அதோ கதியானது
தனிக்கதை





தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...