ஞாயிறு, நவம்பர் 13
பிரிவின் வலி
திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி
நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ
அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்
தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி
புதன், நவம்பர் 2
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா
ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே
ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ
பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
சாதி
கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...
-
ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத க...
-
எலியும் பூனையும் இன்ன பிற “ஜந்துக்கள்” வசிக்க எளிதாய் இருப்பிடம் கண்டு பிடித்துவிடுகிறது நான்கு சுவர்களுக்குள் ...
-
காதலன் என்னிடம் கொண்டாயோ கரிசனம் ஆதலின் எமக்கு அளித்தாயோ தரிசனம் பார்வை தீண்டிட பெற்றேன் விமோசனம் தீர்வை கண்டிட தாராயோ அரியாசனம்
-
அச்சடிக்கும் இயந்திரத்தை அரசாங்கம் வைத்துக் கொண்டு அது ஏன்? வரிக்கு மேல வரிகளை போடுகிறது உழைத்துக் கிடைக்கும் ஊதியத்திற்கு உன்னிடம...