செவ்வாய், ஆகஸ்ட் 12

ஒரு வாரக் கொண்டாட்டம்



இறந்தவனுக்கு திவசம்
இரத்த சம்பந்தக்காரன்
ஒருநாள் செய்வான்

முடியாட்சி மன்னனெனில்
குடிமக்கள் அனைவரும்
கூடி அழுவர்

இன்றுதான் இறந்தான்
என்றிருந்தாலோ
ஏழுநாள் துஷ்டிக்கலாம்

பாட்டன் காலத்தில்
பாடையில் சென்றவனை - இன்று
சுடலையில் தூக்கி நிறுத்தலாமா

கருவறை தன்னில்
கல்லறை ஆனதை
கடபாரையால் எழுப்பலாமா

மறைந்திருந்து கொன்றான்
மாரீச மாயமான் என்றறியா
அயோதிராமன் – வாலியை

சுற்றறிக்கை அனுப்பியே
சுத்திரனையும் சமமாக்கி
சமஸ்கிருதம் படியென்கிறான்

திரேதா யுகமோ
கலியுகமோ – சமஸ்கிருதம்
உனக்கு புரியுமோ?!

நந்தனுக்கு திறக்கா வாயிலும்
தமிழுக்கு கிடைக்கா சிற்றம்பலமும்
ஒருவாரத்தில் கிடைக்க வைப்போமோ?

மூத்த தமிழ் காத்திடவே
மூக்கறுப்போம்
ஸ்ரீதேவி ஆனாலும்




புதன், ஆகஸ்ட் 6

“மிஸ்டு கால்”


நீயோ நானோ
நினைவுகளில் வாழ்பவர்கள் – ஆம்
நினைக்காத நாளில்லை

மறவா
மறந்தாய் – எனவெழுதும்
மடலல்ல இது

உறவா
உருகிடுவேன்
உனதருகாமையில்

சிறகோ – இச்
சிறியவளுக்கில்லை
சிந்தனை மட்டுமே

நாளும்
அழைப்பாய் – பல
கதை கதைப்பாய்

அழைக்க மறந்தாயென
அறிவிப்பில்லை – இதுவென்
அகமகிழ்ச்சிக்கொரு கோரிக்கை

உழைப்பின் வேகத்தில்
உன்னையே மறப்பவன் நீ
ஒருநொடி எனை நினைத்திட

கைப்பேசியில்
எனக்கான அழைப்பை
தவற விடு

வாய்பேசிட நினைத்ததை
கைபேசியின் பாடல்
காற்றாய் ஒலித்திடும்

காலமும் கனவும்
கரைந்திடும்
உன் நினைவில்




யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...