வெள்ளி, டிசம்பர் 30

அண்ணன் - தம்பி- கடன்


கடந்த இரண்டு நாட்களாக, வியாபார காரணங்களுக்காக பிரிந்த அண்ணன் தம்பிகள், குடும்ப நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்தனர். எந்த செய்தி தாளை எடுத்தாலும் இது முன்பக்க செய்தியாக இருந்தது.  ஆம் திருபாய் அம்பானியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பிறந்த கிராமத்தில் குடும்பமாக சந்தித்துக் கொண்டனர் முகேஷ், அனில் மற்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதிரிகள்

மேலே உள்ள பட்டியல் அண்ணன் பொது துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன்.  இது சுமார் ரூ.7000 கோடி என பட்டியல் சொல்கிறது.

எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு முதலீடாக செலுத்திய தொகை இதில் இல்லை.  இது தவிர எண்ணற்ற பொதுமக்கள் சிறுதொகையாக பங்கில் முதலீடு செய்துள்ளனர்.

இப்படி அடுத்தவர் பணத்தில் சாம்ராஜ்யம் நடத்து சாமர்த்தியம் யாருக்கு வரும்.  அரசு அதற்கு துணை நிற்கிறது.

மேற்கண்டது அண்ணனின் கதை மட்டுமே.  தம்பியின் கதை தனிக் கதை.

புதன், டிசம்பர் 28

பாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை


பாரமவுண்ட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடன் விவரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.  இதன் படி ரூ.437 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.   ஆனால் உண்மையில் வங்கிகளுக்கு ரூ.2000 கோடி செலுத்த வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது,

இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால்,  மேற்கண்ட இக்கடன்களுக்கு எந்தவித ஈட்டுறுதியும் அதாவது எந்தவிதமான அசையா சொத்தும் கடனுக்கு ஈடாக கொடுக்காமல் பெற்றுள்ளது.

கல்வி கடன் ரூ.10 லட்சம் வேண்டுமென்றால் 1008 விதிகள், கண்டிப்பாக அசையா சொத்து ஈட்டுறுதி வேண்டுமென்று கேட்கும் வங்கிகள் எப்படி இக்கடனை வழங்கியது.

ஓ அதனால்தான் இந்த முறைகேடை விசாரிக்க அனைத்து வங்கிகளும் சி.பி,ஐ விசாரிக்க பரிந்துரைத்து விட்டு அமைதியாக இருக்கின்றன. சி.பி.ஐ.  விசாரித்து ஏதாவது பணம் வசூல் ஆகியுள்ளதா சொல்லுங்கள் மக்களே

செவ்வாய், டிசம்பர் 27

குங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்

கடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன்.  உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.

எதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.

கூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.

தசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார்.  அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.

அசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.

பூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாளை நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர்.  பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார்.  அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.

சொல்லுங்கள்

குங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா

101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா



புதன், டிசம்பர் 14

மன்மோகன் சிங்

நண்பர் அனுப்பி வைத்த மின்னஞ்ஞல், படியுங்கள், ரசியுங்கள்


Prime Minister Man Mohan Singh walks
into State Bank of India to cash a cheque. As he approaches the cashier
he says: 'Good Morning, Ma'am, could you please cash this cheque for me?'

Cashier: 'It would be my pleasure, Sir.
Could you please show me your ID?'

PM: (utterly shocked) 'I did not bring
my ID with me as I didn't think there was any need. I am Man Mohan Singh,
THE Prime Minister of India!'


Cashier: 'Yes Sir, I know who you are,
but with all the regulations and monitoring of the banks because of impostors
and forgers, etc., I must insist on seeing your ID.'


PM: 'Just ask anyone here at the Bank
who I am and they will tell you. Everybody knows who I am!'


Cashier: 'I am sorry Mr. Prime Minister,
but these are the bank rules and I must follow them strictly.'


PM: 'I am urging you, please, to cash
this cheque. Soniaji has gone to America and Rahulji has, by mistake, taken
the keys of the safe with him. I need some extra spending money urgently.'


Cashier: 'Look Mr. Prime Minister, this
is what we can do. Some months back, Baba Ramdev came into the bank without
ID. To prove he was Ramdev, he pulled his tummy in so much that it went
and touched his back. With that feat, we knew him to be Baba Ramdev and
cashed his cheque. On another occasion, Yuvraj Singh came in without his
ID. To prove his identity, he just went out and hit six consecutive sixers.
With that we knew for certain that he was indeed Yuvi himself, and we cashed
his cheque. So, Mr. Prime Minister, what can you do to prove that it is
you, and only you, as the Prime Minister of India?'



PM stood there thinking, thinking and
thinking, and finally said: 'Honestly, my mind is totally blank ~ there
is nothing that comes to my mind... I can't think of a single thing!!!'



Cashier: 'There you are! That is enough. Now I don't have any doubt
that you are our Prime Minister Dr.Man Mohan Singh.
In what denominations would you like the cash, Mr. Prime Minister?

செவ்வாய், டிசம்பர் 6

பொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்

நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது.

காரணம்

வழக்குகளால் கால விரயம் ஏற்படும், மேலும் நீண்ட நாட்கள் இதற்கு ஏற்படும். மேலும் முதலீட்டாளர்கள் பாதிக்கபடுவார்கள்.  ஆம் எந்தவொரு வழக்கும் மேற்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பை பாதிக்கும்.  அப்பாதிப்பு சிறு முதலீட்டார்களான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  ஆம் அவர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்த பணம் காணாமல் போய் விடும்.  எனவே நடவடிக்கை கைவிடப்பட்டு வேறு நிவாரணங்கள் பரிசீலிக்கப்படுகிறது.


எதற்காக

கோதவரி படுகையில் அதாவது KG-D6 என்னுமிடத்தில் குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் அந் நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை.  குறைவாகவே உற்பத்தி செய்து நட்ட கணக்கு எழுதியுள்ளது.    இதனால் ஏற்பட்ட நட்டதிற்கு அபராதத் தொகை வசூலிக்க கடிதம் அனுப்பபடுகிறது.  அதற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடிதத்தால் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.


இதே விஷயம் தொடர்பாக அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையிட்டு கொள்ள உச்ச நீதி மற்றம் தலையிட்டு தீர்த்து வைத்தது ஞாபகம் இருக்கலாம்.  


இந்த திட்டத்திற்கு  ஏற்கனவே ஏறக்குறைய ரூ.9000 கோடி செலவிட்டுள்ளதாக கணக்கெழுதி வைத்துள்ளது ரிலையன்ஸ்.   2 மில்லியன் வாயு எடுக்க வேண்டிய இடத்தில் 1 மில்லியன்தான் எடுக்கிறார்கள்.  ஆனால் செலவு..............


2000 ஆம் ஆண்டில் லைசென்சு பெற்ற ரிலையன்ஸ் இன்னும் லாபம் எதுவும் அரசு செலுத்தவில்லை.   அரசு இன்றுதான் நட்ட கணக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.  ஏன் தெரியுமா கள்ள கணக்கு.  முதலீட்டில் ஒரு பகுதி எடுக்கும் வரை அரசுக்கு எவ்வித லாபத் தொகையும் செலுத்த தேவையில்லை என்பது ஒரு விதி.


இந்த துரப்பன பணிக்காக பல்வேறு சலுகைகள் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்போதும் சலுகை பெற்றுள்ளது


ஆம் மக்களே உங்கள் பெயரால்

ரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நம் முதலாளிகள் ரூ.10 கோடி அதற்கு மேல் வாங்கிய கடன் 14 இலட்சம் கோடியாம்.  வாங்கியவர்களின் எண்ணிக்கை 22500.

ரூ.10 கோடி அதற்கு மேல் கடன் வாங்கிய 700 பேர், ஏறக்குறைய ரூ. 26000 கோடி கட்டாமல் எவ்வித தொல்லையுமில்லாமல் அதாவது வழக்குகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் 3400 வழக்குகள் ரூபாய் ஓரு கோடி அதற்கு மேல் பெற்ற கடனுக்காக கடன் வசூல் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ளது.   இதன் மூலம் வர வேண்டிய தொகை ரூ.21,400 கோடி.

கடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகள் அத்தோடு விடுவதில்லை, வேறொரு நிறுவனம், வேறொரு வங்கி என எமாற்றிக் கொண்டுதான் இருகின்றனர்.

 CIBIL: Credit Information Bureau (India) Limited என்ற நிறுவனம் இவர்களை பற்றி தகவலை சேகரித்து வைக்கிறது.  இத்தகவலை பாதிக்கப்பட்ட வங்கி அளித்தால்தான் இதன் தகவல் பெட்டகத்தில் பார்க்க முடியும்.  ஆனால் எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்வதில்லை.  அதுவும் ஆளுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்கின்றன.

அரசியல் பின்புலம்,  பணம், ரவுடியிசம் இவைகள் வங்கி அதிகாரிகளை கட்டி போட வைக்கின்றன.  ஒன்று அவர்களுக்கு சதகமாக நடக்க வைக்கிறது அல்லது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

வங்கியின் கடன் 1993 வரை பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  1993 க்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  வங்கிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கடனுறுதி மற்றும் மறுசீரமைப்பு சட்டம் 2002 (SARFAESI ACT 2002)  இயற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயினும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.

ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்ட கடனில் ஏதேனும் தவறுகள், குற்றங்கள் நடைப்பெற்றால் சி.பி.ஐ க்கு அதன் விவரம் அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மறந்து விடுவார்கள்.  அவர்களை பொறுத்தவரை அது சிபிஐ விவகாரம்.  முதலாளிக்கு ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ விசாரணை. கைது கண்டிப்பாக இருக்காது.  ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் பணம் வசூலிக்க வழியில்லை.

குற்றவியல் நடவடிக்கை,(criminal action)  வங்கியால் எல்லா கணக்குகளிலும் நடைபெறுவதில்லை.   அவ்வாறு மேற்கொண்டால் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு தடைபடும்.  அதாவது அவர்கள் கடன் வழங்கும் போது அளவுக்கு அதிகமான கேள்விகள், ஆதாரங்கள் கேட்டு கடன் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள்.   ஏனெனில் பின்னால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால்.

அதனால் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர் கடனை திருப்பி செலுத்தலாமா வேண்டாமா? எவ்வளவு செலுத்த வேண்டும்.  தள்ளுபடி எவ்வளவு கோரலாம்?  மத்திய வங்கியின் வழிகாட்டுதல் என்ன?

எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.  நாம் வீட்டுக் கடன், கல்வி கடன், விவசாய கடன், தனிநபர் கடன் வாங்கி வீட்டை, விவசாய நிலத்தை இழந்து நிற்கும் அப்பாவிகள்

யார் நல்லவர்கள், எல்லாம் இழந்து அப்பாவியான நாமா, எதையும் இழக்காமல் பொது மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்ட முதலாளிகளா

திங்கள், டிசம்பர் 5

MNC in retail

It is an old agenda but implemented now. Whether people of india supporting or agitating it will  be implemented .
Can we stop eating
No then it is needed

Present retail system providing food but you will have to cook

If MNC allowed in retail you need not go to restaurant. Packed food  readily available in retail shops

Yes we need MNC retail shop

Otherwise who will do all these silly works.


Sent from BSNL with my BlackBerry® smartphone

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...