3வது விதிப்படி
எனை ஈர்க்கும்
எதிர்வினையே
திக்குத் தெரியாத
பரந்த வெளியில்
திசைதனை காட்டுவது
கன்னி இருக்கும் திசையை
புலனறியும் வித்தை
பூவுலகின் விந்தையே
மின்னோட்டக் காந்தப் புயல்
அன்பின் அலைவரிசையில்
அதிர்வெண்களைப் பரப்ப
கோட்பாடுகள் மாறலாம்
எனைச் சுற்றும் பூமியாய்,
உனைச் சுற்றும் சூரியனாய்
சந்திக்கும் புள்ளியில்
சங்கமிக்க
புதுமைகள் படைப்போமடி
ஒளிச்சேர்க்கை விதியின்படி
உனைப் பார்த்தே
என் சுவாசங்கள்
நீடித்திருக்கின்றன
உயிரியல் தத்துவம்,
வேதியியல், இயற்பியலில்
இருந்துவிட்டு போகட்டும்—
இலக்கியமாய் இக் கவிதை
உனக்காக
அ. வேல்முருகன்






