திங்கள், ஜூன் 29

அர்ஜுனன்

மகாபாரதத்தில் பெண்கள்' – உரையை ரத்து ...



குருசேத்திரப் போரில்
குலம் கெடுமேயெனக்
கோகுலக் கிருஷ்ணனிடம்
கோரிக்கை வைத்தவன்

தூரோணணிடம் கற்றாலும்
ஏகலைவனைக் காட்டிலும்
ஓருபடிக் கீழான
அர்ஜுனன் கதையிது

சுயம்வரப் போட்டியில் வென்று
பாஞ்சாலியை அழைத்து வர
வென்றது யாதென அறியா- குந்தி
ஐவரும் பகிர்க என்றதனால்

ஆண்டுக்கு ஒருவரிடமென
ஐவரோடு வாழ்ந்த
திரெளபதியின்
மூன்றாவது மணாளன்

குந்தியின் மகனா
இந்திரன் மகனா
இயம்பினால்
பாண்டு கோபிப்பானோ

குடும்பம் விடுப்போம்
குருசேத்திரம் வருவோம்
குலப் பெண்களின் – கற்புக்கு
கவலைப்பட்டக் கதை பார்ப்போம்

பேராசைப் போரால்
அதர்மம் பரவும்
சாதிக் கலப்பால்
குல நாசமாகுமன்றோ என்றான்

சிக்கலுக்குப் பதிலுரைக்காது
ஆன்மா இறப்பற்றது – ஆக
கர்மம் செய்
கலங்காதே என்கிறான் கிருஷ்ணன்

கற்பும் சாதியும்
அர்ஜுனனின் கவலையா
கீதாசிரியனின் கவலையா
பார்ப்போம் வாருங்கள்

வனவாசத்திற்குப் பின்
யாதவக் குல நகரான
துவாரகா விஜயம்
சுபத்திராவைக் காண - காதல்

பலராமனோ சுபத்திரையை
துரியோதனுக்கு நிச்சயித்து
ஏற்பாடுகள் நடக்க
ஏமாற்றத்தோடு அர்ஜுனன்

வாட்டம் போக்க
வழியைச் சொன்னான் கிருஷ்ணன்
சன்னியாசி வடிவெடுத்து
சுபத்திரையைக் கவர்ந்தான்

ஆனது ஆனதென
அவளோடு மணம்புரிய
அபிமன்யு பிறந்தான்
அத்தோடு முடியவில்லை

ஓராண்டுக்கு ஒருவர்
விதிமீறினால் ஓராண்டு வனவாசம்
விதிவசம் விதிமீறினான் அர்ஜுனன்
உலூப்பியைச் சந்தித்தான்

பாம்புருவக் காரிகை
நீரினங்களில் நாயகி
போர்கலைகளில் வல்லவள்
மோகங் கொண்டாள் அர்ஜுனனிடம்

கங்கைத் தீரத்தின்
நாகமன்னனின் மகளவள்
சம்மதிக்கச் செய்து - அர்ஜுனனை
பாதாளம் கொண்டுச் சென்றாள்

பாதாள உலகில்
பார்த்தனோடு உலூப்பி
அரவான் என்றொரு மகனை
அர்ஜுனனுக்காக ஈன்றெடுத்தாள்

பரந்த உலகில்
பலவூர்ச் சுற்றிய அர்ஜுனன்
மணிப்பூரில் மாலையிட்டான்
சித்திராங்கதை என்பவளுக்கு

அவ்வூர் நியதிப்படி
அவளையோ அவள் வாரிசையோ
அர்ஜுனன் அழைத்துச் செல்ல முடியாது
அதற்குடன்பட்டேப் பாப்புருவாகனன் பிறந்தான்

பாப்புருவாகனனுக்குப் போர்கலையை
உலுப்பிக் கற்பிக்க
தொடுத்தனன் அம்பை
அர்ஜுனன் நோக்கி

ஊருகொன்றுக் குலத்திற்கொன்றென
உல்லாசமாய் இருந்தவனா
குலம், கற்பெனப் பேசினான்
கொஞ்சம் சிந்தியுங்கள்

பகவத் கீதை
பம்மாத்து
பார்த்துப் படியுங்கள்
பல உண்மைப் புரியும்

ஞாயிறு, ஜூன் 28

பஞ்ச பாண்டவர்கள்



 




பாரதமாம்
பஞ்சப் பாண்டவர்களாம்
பக்தி இலக்கியமாம்
பாராய்!! கதை கேளாய்!!

மானிரண்டு மையலிலே
மன்னன் பாண்டுவோ
காட்டில் வேட்டையிலே
கொன்றனன் ஆண்மானை

கட்டற்றக் கலவிக்காக
கடுந்தவ வலிமையால்
கிண்டமா முனி இணையோடு
கலைமானாய் இணைந்திருக்க

மாண்டது மானென
மன்னன் நினைக்கையில்
பக்கம் சென்றனன்
பார்த்தால் கிண்டமா முனி

இட்டான் சாபம்
இச்சையோடு இல்லாளை
இப்பிறவியில் அணுகினால்
இகலோகமன்றுப் பரலோகமென

இட்ட சாபம் கேட்டு
இடிந்து கலங்கி
அத்தினாபுரம் செல்லாது
ஆரண்யத்தில் வாசம் செய்கிறான்

மன்னனாக நீடிக்க
மகன் இல்லையே என
மருகி நிற்க
சுவேதகேது முனியின் நியதிப்படி

காதல் சுகம் அறியாதவன்
காதலோடு தொட்டால்
மரணமென
மாமுனி உரைத்ததால்

கொண்டவன் விரும்பும்
குணாளனோடு கூடிக்
குழந்தைபெறக்
குந்தியிடம் வேண்டினான்

அன்றே துர்வாச முனி
பிற்காலச் சிக்கல் அறிந்து
தேவர்களோடுக் கூடும் வரம்
குந்திக்கு அளிக்க

சோதிக்கச் சூரியனை அழைக்க
கர்ணனை ஈன்றாள்
கங்கையில் விட்டு
கன்னியாய் இருந்தாள்

முனியோடுக் கூடுவதா
தேவர்களிடம்
தேவையைக் கூறினால்
தேடி வாராரா என்றாள்

தர்மத்தின் தலைவன்
தயை கொண்டான்
யமனை அழைத்தாள்
யுதிஷ்ரன் பிறந்தான்

வாயுப் பகவானோ
வசதியாய்
தன் சக்தி தர
பீமன் பிறந்தான்

தேவர்களின் தலைவன்
தேர்ந்த அழகன் இந்திரன்
தேவையறிந்து
தந்தனன் அர்ஜுனனை

மாற்றொரு இணை
மாத்ரி தேவி
மழலை வேண்டுமல்லவா
குந்தியே வேண்டுகிறாள்

அஸ்வினித் தேவர்கள்
இரட்டையர் அவர்கள்
நகுலனும் சகாதேவனும்
நலமுடன் பிறந்தனர்

பாதி தேசம் வேண்டிய
பாண்டவர்கள் பிறந்தது
தேவாதித் தேவர்களுக்கு
தேவையா இப்பாரதம்

சனி, ஜூன் 27

வேண்டுதல்



 

களைகட்டும் அழகில் சொக்கி
   கண்டாங்கிச் சேலைக் குமரிய
இளவட்ட கல்லத் தூக்கி
   இணையாக ஏற்ற வாழ்வில்
பளபளத் தங்கத்தைத் தேடாது
   பக்குவமாக் கடமைய முடிச்சு
தளர்ந்த வயதில் வேண்டுதல்
    தலம்பலக் கண்டிட வந்தோம்



வேண்டி வந்த இடத்தில்
    வேண்டி நின்றாள் வேடிக்கை
ஆண்டு பலவுங் கடந்தாலும்
   அந்நாள் நினைவு வந்திடவே
தொண்டுக் கிழவ னானாலும்
   துணைக்கு உதவி செய்தலே
ஈண்டு நன்மை பயக்கும்
   இனிது நிறைவேற மகிழ்ச்சி


வெள்ளி, ஜூன் 26

விஸ்வரூபம்



கலை  நாயகன் 
காட்டிய  ரூபம் அன்று
வேதமூர்த்தியான விஷ்ணுவின் 
விஸ்வரூபத் தரிசனம்

பிறப்பு இறப்பு - இன்னும்
பிற இரகசியங்களையும்
அரியே உந்தன்
அழிவற்றப் பெருமையும் கேட்டேன்

உன்வண்ணம் இதுவென
எவ்வண்ணம் வர்ணித்தாயோ
அவ்வண்ணமே உணர்ந்தேன்
அவ்வாறுக் காணத் தகுதியிருப்பின்

அழிவற்ற அவ்வடிவை
அடியேனுக்கு காட்டிடு
மனமயக்கம் நீக்கியவனே
மாரூபத்தைக் காட்டிடு

திருதிருப் பார்வையால்
தெய்வத்தைக் காணமுடியுமோ
தெய்வப் பார்வை அருள்கிறேன்
திருமேனியை பார் பார்…….

அனைத்தையும் பார்
அசைவதையும் அசைவற்றதையும்
எதைஎதைப் பார்க்க விரும்புகிறாயோ
எல்லாவற்றையும் பார்

வசுக்களையும் உருத்திரர்களையும்
அசுவினி தேவர்களையும்
ஆதித்தியர்களையும்
அவர்தம் பரிவாரங்களையும் பார்

பல நிறங்களாய்
பல வடிவங்களாய்என்
தெய்வத் தன்மை பொருந்திய
உருவங்களைப் பார்

நூறாக ஆயிரமாக
பெருகும் வடிவத்தை
பார்த்ததில்லையே?!
பார்த்தனே பார் பார்

அங்ஙனம் கண்டதை
அவ்வாறே திருதராஷ்டிரனிடம்
சஞ்ஜயன் உரைத்திட்டு
மேலும் தொடர்ந்தான்

ஆயிரம் சூரியனின்
அளவற்ற ஒளி
அம்மகா புருஷனின்
அற்புத முகவடிவாகும்

ஆயுதம் பலவும்
ஆபரணம் பலவும்
அஃதுடன் முகம் பலவும்
அர்ஜுனன் கண்டிட

பெருமானின் உலகத்தை
பெருவுருத்தில் கண்டதால்
பெருமகிழ்ச்சிக் கொண்டே
தலைவணங்கிக் கூறினான்

உன் தேகத்தில்
உயிர்கள் பலவும்
பிரம்மனையும் ரிஷிகளையும்
சர்பங்களையும் கண்டேன்

எல்லையற்றவனே
எங்கும் நிறைந்திருப்பவனே
அடி முடியையும், நடுவையும்
அடியேன் காணவில்லை

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட வெளியை
உன்னால் நிறைந்துள்ளது
அதனால் மூவுலகமும் நடுங்குகிறது

உன் உருவம் கண்டு
உலகம் நடுங்க
யானும் நடுங்கத்தைரியமும்
மன அமைதியும் அகலுகிறதே

அளவற்றத் தோள்களோடு
அக்னியை வாயாக உடையோனே
ஆதிநடுவந்த மில்லாதவனேநீயே
ஆதிபுருஷன் என நம்புகிறேன்

முப்பத்து முக்கோடி தேவர்கள்
வியந்து பார்க்கும் இறைவா
திறந்த நின்வாய்க் கண்டு
திக்குதிசை நான் காணவில்லை

விட்டிற் பூச்சிகள்
வீழும் ஒளி நோக்கி
அங்ஙனமேத் திருதராஷ்ரானின்
தவப்புதல்வர்கள் நின்வாயில்

உன் செய்கையை
உணரவில்லை நான்
உண்மையில் யார்நீ
உரைப்பாயா! உன்னை வணங்குகிறேன்

உலகழிக்கும் காலன்
நீயில்லாமலும்
நின் எதிரிகள் வீழ்வார்கள் - ஆக
நீ எழுந்திரு

துரோணன், பீஷ்மன்
கர்ணன் மற்ற வீரர்களும்
என்னால் ஏற்கனவே
கொல்லப் பட்டவர்கள்

கலங்காதே
காரணமாய் நீயிருப்பாய்
கொன்றது நானாயிருப்பேன்
வெற்றி உனதேப் புறப்படு

இடது கையால்
அம்பெய்தும் அர்ஜுனா
பகைவர்களை வென்று
புகழை அடை, பாராள்

உனது புகழைப் பேசிட தேவா
உலகம் ஆனந்தமடைகிறது
ராட்சசர்கள் நடுங்குகின்றனர்
சித்தர்கள் வணங்குகின்றனர்

மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
நீயே, வாயு, யமன், அக்னி
வருணன், சந்திரன், பிரஜபதி
ஆக ஆயிரம் வணக்கங்கள்

அடே கிருஷ்ணா
அடே யாதவா
அடே நண்பா - என்று
அன்பினால் அழைத்திருப்பேன்

மதிப்பு குறைவாக
அவமதிப்பாய் நடந்திருந்தாலோ
அளவிடுதற்கரிய பெருமையுள்ளவனே
மன்னித்தருள வேண்டுகிறேன்

மகனைத் தந்தையும்
நண்பனை நண்பனும்
காதலியைக் காதலனும்
பொறுத்தருள்வது போல

போற்றுதலுக்கு உரியவனே
வீழ்ந்து வணங்குகிறேன்
எனை ஏற்று
பொறுத்தருள வேண்டுகிறேன்

காணாததைக் கண்டேன்
கண்டதால் நடுக்கமுற்றேன்
பழைய உருவை காட்டி
பயத்தைத் தெளிவிப்பாயா

மகிழ்ச்சிக் காரணமாக
யோகச் சக்தியால்
யாரும் காணாததை
யாம் உனக்கு காட்டினோம்

பெருந் தவத்தாலோ
வேத யாகங்களாலோ
தானத்தாலோ படிப்பாலோ
பூமியில் காண இயலாது

கோர உருவங்கண்டு
குழப்பம் வேண்டாம்
பயம் நீங்கி
பழைய உருவத்தை பார்

இங்ஙனம் சொல்லி
இனிய உருவத்தை காட்டி
அர்ஜுனனை தேற்றியதை
சஞ்ஜயன் திருதராஷ்டனிடம் உரைத்தான்

அர்ஜுனா, ஆயினும்
ஒருமுகப்பட்டப் பக்தியால்
உள்ளபடி அறியவும்
எனை காணவும் அடையவும் முடியும்

எனது பக்தன்
எனை கதியாகக் கொண்டவன்
எவ்வுயிரையும் வெறுக்காதவன்
எனக்காக வேலை செய்பவன்

எவன் பற்றற்றவனோ
எது நடந்தாலும் - தனக்கு
எதிரானதல்ல நினைப்பவன்
என்னை அடைகிறான்

பகவத் கீதையின்
பதினொராவது அத்தியாத்தை
பக்தியில் விளக்கி விட்டேன்
பகுத்தறிவோடு இப்போது

தெய்வத்தை காண
தெய்வப் பார்வையா  
தேவனின் மகிழ்ச்சியா
பட்டிமன்றம் வைத்திட்டான்

ஒரு சூரியனின் - 100 டிகிரியில்
வதங்குது தேகம்  
1000 சூரியனின் ஒளியை
பார்த்தன் பார்த்தது உண்மையா

உலகின் எல்லாமே
அவனாக இருந்திட - நாம்
காரணம்தானே
கவலை எதற்கு

கொல்வது அவன்
கொற்றம் நமதெனின்
குதுகலிக்கலாம்
புழல் ஜெயிலென்றால்

யாரும் காணாத உருவத்தை
யாரும் காணாது சஞ்ஜயன்
கண்டு கூறுவது
திருதராஷ்ரனின் அருள்தானே

மூவுலம் நடுங்கலாம்
மைத்துனர் நடுங்கலாம்
நாம் பக்திக் கொண்டாலும்
நமை யொன்றும் செய்யார்

கொரோனாவில்
கோவிந்தாவானாலும்
குடிக்கக் கஞ்சியில்லை என்றாலும்
எவ்வடிவிலும் வாரான்







செவ்வாய், ஜூன் 23

பூரி ஜெகந்நாதா


தங்கத் துடைப்பத்தால்
மன்னர் பெருக்கப்
பலபத்திரர், சுபத்திரையோடு
ஜெகந்நாதர் ரதத்தில் புறப்பட்டார்

உச்சநீதி மன்ற நீதிபதிகளை
அச்சுறுத்தியத் துடைப்பக்கட்டைகளை
ஆருக்கும் தெரியவில்லை
அவரும் கண்டுக் கொள்ளவில்லை

கொரோனாத் தொற்றால்
கூட்டத்தைப் பெருக்க வேண்டாமென
கும்மியடித்த சங்கராச்சாரி - இன்று
எதிர்பதனால் இந்த அனுமதியோ

மகாகனம் பொருந்திய
மக்கள் வழக்கறிஞ்ஞர்களால்
கூடாது என்ற தீர்ப்பை
கூடி மாற்றினர்

நாம் நம்புகிறோம்
சமூக இடைவெளியோடு
பக்தர்கள் இன்றி
பாங்கோடு நடத்துவீர்களென

பொய், பிறழ் கண்டவர்கள்
பொதுவாய் சொல்லி
ஒதுங்கிக் கொள்ள
ஒரு கூத்து ஆரம்பமானது

ஜராவின் (வேடன்) அம்பால்
ஜடமானான் கிருஷ்ணன்
அதாவது மரமானான்
மரணமெய்தினான்

இந்திரத்துய்மன் கனவில்
இறைவன் தோன்றி
ஆழிநீரில் மிதந்து வருவதில்
அற்புதசிலை வடித்திட வேண்டினான்

பூரிக் கடலில்
மிதந்து வந்ததோ மரக்கட்டை
பூஜைகள் செய்து
பெருமாளை வடிக்க உத்திரவு

உளி கொண்டு செதுக்க
உடைந்தது உளி
வயோதிக வடிவில்
வந்தனன் ஒரு தச்சன்

21 நாள்
அறைக் கதவை
ஆரும் திறக்கக் கூடாதென
ஆரம்பித்தான் வேலையை

15 நாட்கள்
தச்சன் உளி தடதடத்தது
அடுத்த 3 நாட்கள்
அமைதியாய் இருந்தது

பொறுக்காத மன்னன்
அறையை திறந்திட
சினந்தே உரைத்தான் - இனி
சிலைகள் அரைகுறைதானென

மூன்று சிலைகள்
முகம், கை மட்டுமே
அங்ஙனமே நிறுவி
அனைவரும் வழிபட்டனர்

இந்திர தையுமா
மன்னர் மரணத்திற்கு பின்
கோயில் பாழ்பட - பின்னர்
கடல்கோள் கொண்டது

இன்றைய கோயில்
கிபி 1200 -ல் முடிக்கப்பெற்றது
ஆயினும் இராமனும்
பாண்டவர்களும் வணங்கிய தலம்

நம்பிக்கையில்
கேள்வி எழுப்பாது
நழுவுவது நலம்
நம் நீதிபதிகளைப் போல்


திங்கள், ஜூன் 22

கற்றல்


 

வில்லின் நாணா
வனிதை யானா
வளை-வில் அழகு
வளைத்துப் பழகு

நாணைப் பூட்டி
நாணமற்று விளையாடு
நாழிகை யென்ன
நாள் முழுக்கத் தேடு

ஏழுலகம் காட்டவா
எனதெடைப் பார்க்கவா
ஏனிந்த கேள்வியடி - நீ
எந்தன் வெற்றியடி

இதழெனும் மதுவிருக்க
ஏனிந்தக் கோப்பையடி
தாகம் தீர்ந்தாலும்
தவிப்பாய் அதற்காகடா

மங்கையிடம் மற்போரா 
மன்மதக் கலைதானடா
தீரா மோகத்திலே
தடையேனடி வேகத்திற்கு

ஓய்யார அழகினிலே
ஓய்வறியா மனசு
ஓடம் கரைசேர
ஓர் உயிராய் ஆவோமே

சனி, ஜூன் 20

சென்னை வெறுத்ததோ

chennai celebrates Madras Day how this name came– News18 Tamil





வந்தேறிகளால்
விரிந்தச் சென்னை   
வாழ வழியில்லையென
நம்பிக்கையைக் குலைத்ததா

பனியாக் குஜராத்திக்கும்
“பவன் புரோக்கருக்கும்”
பாதைக்காட்டிய சென்னை
தமிழனுக்குத் தடுமாறுதோ

புறாக் கூண்டாயினும்
இரை இல்லையெனில்
சிறகடித்துத் தேடவேண்டும்
சிறையிலடைந்து சாக வேண்டுமோ

உச்சிமீது வானிடிந்தப் போதிலும்
அச்சமில்லை என்றவன்
ஆகாரத்திற்காகப் பாண்டிச்சேரி
திருவல்லிகேணியென அலைந்திருக்கையில்

உதிரிகள் நாங்கள்
உதவ யாருமில்லாததால்
கிராமத்திற்குப் பயணிக்கிறோம்
கால்வயிறு நிறையுமென

“ஆட்டோ/டாக்ஸி” ஓட்டுநராய்
கட்டிடத் தொழிலாளியாய்
தினக் கூலிகளாய்
திக்கற்று போகிறோம்

கொரோனாவால் மடிவதா
பசியால் சாவதா
ஏதும் அறியாததால்
திரும்பிச் செல்கிறோம்

நகரக் கட்டமைப்புக்கு
நாங்கள் தேவைப்படுவோம்
அப்போதுத் தேடுவீர்
அதுவரை நன்றி

வெள்ளி, ஜூன் 19

சீன எல்லை


என்ன நடக்கிறது என விளக்குங்கள் ...



தேசப் பக்தி
திரும்பியப் பக்கமெல்லாம்
சீன எதிரியை
சீக்கிரம் அழித்திட

உயிர்கள் 20
உலகை விட்டு மறைந்தது
ஊர்சுற்றி
ஒரு வார்த்தை சொல்லவில்லை

உலக நாடுகள்
உம் என்றிருந்தன - ஏன்
ஊர் சுற்றியை
உலகம் கைவிட்டது

சீனத் தயாரிப்புகளை
தவிர்க்கச் சொல்லி
தேசப் பக்தர்கள்
கோரிக்கை வைக்க

ஆம் என்றே
ஆமோதிக்க
அச்சம் உண்டா
அமைதி தவழ்கிறதே

அரசுதான்
அறிவிக்க வேண்டும்
இறக்குமதிக் கொள்கையை
ஆகட்டும் என்றொரு வார்த்தையில்லை

குறைந்த விலை
குறைந்தக் கூலி
குவிந்தக் கூட்டத்தை
குறையாதுப் பார்த்துக் கொண்டான்

உலகமயமாக்கலில்
உள்ளூர் தொழில்கள்
ஊனமாயினப் போட்டியில்
ஊமையாய் அமைதிக் காத்தனர்

அமெரிக்க ஐபோன்
இந்தியாவில் விற்க
சீனம் தயாரித்தது
சினமெதற்குப் பக்தர்களே

கொரோனாவின் தாக்கத்தால்
பன்னாட்டுத் தொழில்கள்
சீனாவிலிருந்து புலம்பெயருமென
கனாக் கண்டாய்

ஐரோப்பிய மக்களுக்கு
ஆசிய மக்களுக்கென
தரம்பிரித்து தயாரிப்பவன்
வீழ்வான் என நினைத்தாயோ

ஆயுதமின்றி வீழ்ந்தது
அவனல்ல - நம்
புதல்வர்கள் - ஆக
அரசியலைப் புரிந்து கொள்


புதன், ஜூன் 17

கறுப்பு







வல்லினமா
மெல்லினமா
கறுப்பா – கருப்பா
நிறமா – சினமா

கறுப்பெனில் சினம்
காயம் படபட
ஆறாது………
ஆறாகப் பெருகும்

ஜார்ஜ் ப்ளாயெட்
இயலாது போனான்
ஆயினும் மூச்சு
ஆறாது ஓடுது

நிறம் அவனா
நீங்கள் உயிரா
மாய்வது இனமா
வாழ்வது நீங்களா

பிரெடரிக் டக்லஸ்
ரோசா பர்க்ஸ்
மார்டின் லூதர் கிங்
மாறாத்  தொடர்கதையாய்

அழகற்றவர்கள்
நாகரீகமற்றவர்கள்
வெள்ளை உலகின்
உளவியல் உருவாக்கங்கள்

ரோமனியனுக்குத் துக்கமாக
பெரியாருக்கு எதிர்ப்பாக
அறிவியலாளருக்குக் கருந்துளையாக
வெள்ளையனுக்கு வெறுப்பாக

நீதியின் சின்னமாய்
பகுத்தறிவு வண்ணமாய்
எதிர்பின் அடையாளமாய்
கன்னிச் சாமியாய்

கருப்பு பணமாய்
கறுப்பு ஆடுகளாய் 
கறுப்பு நிறுவனங்களாய் 
கறுப்பின் பட்டியல் நீளலாம்

கருப்பு எதுவென
கதை நாயகி
வரிசைப் படுத்த
பிடித்ததோ கருப்பு

வலியைப் போக்க
புனைந்து எழுதியதால்
பிடித்த நிறமென
பிதற்றி திரிகிறோம்

கருப்பே அழகு
காந்தலே ருசி
கவைக்கு உதவாது
களத்தில் படும் அவமானங்கள்  

சிவப்புப் பச்சையோடு
நீலம் கூடினால்
வெள்ளையாம் – ஏதும்
இல்லையெனில் கருப்பாம்

வண்ணங்களுக்கு இலக்கணம்
வடித்த மனிதனோ
இனங்கள் இயற்கையென
ஏனோ ஏற்க மறுக்கிறான்

அடர் கருப்புக்கு
அந்த நிறம் எடுபடாதென
வெள்ளையை
தேர்ந்தெடுப்பாய்

ஊதா கதிர் வீச்சில்
உடலைக் காக்குமாம்
உள்ளம் தாங்கலியே
உதவாதப் பேச்சில்

கருப்பச்சாமி - எங்கள்
குலத் தெய்வம்
குறத்தி வள்ளியோ
சுப்புணிக்குத் துணை 

வக்கற்றுப் போனால்
வாழ்வில் சங்கரன்
பிச்சை ஏற்றிட
தாழ்ந்துப் போவதில்லை

குல நியதியென
வேத முரைப்பதால்
மேன் மக்களாய் – மற்றோர்
மண் மக்களாய்

கருமை நிறக் கண்ணன்
களவாடினாலும்
கன்னியர்களால்
காதலிக்கப்படலாம்

மைக்கேல் ஜாக்சனின்
பிளாஸ்டிக் முகம் – நீங்கள்
குதுகலித்திருக்கலாம் – ஆயினும்
அவனை கொன்றது

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
இந்தியப் பூர்வகுடிகள்
இனவெறியின்
இலக்குகள்

ஃபேர் அன்ட் லவ்லியால்
நிறத்தை மாற்றலாம்
வெறுப்பவனை
வீழ்த்துவதெப்படி

அழகர்
கள்ளழகரான
தல புராணம்
தமிழனின் வரலாறு

மரபணு மாறுமா
மனங் கலந்தால் – ஆம்
இனங்கள் இணைய
இழிவுகள் மறையலாம்

நிறத்தால் மேம்பட்டவன்
நிலமதில் யாரிங்கே
குணத்தால் அநீதிகண்டு
கொதிப்பாயெனில் மனிதனாவாய்

கருப்போ மஞ்சளோ
எதுவாகவும் இருக்கட்டும்
எனகிங்கு உரிமையில்லையா
நானிங்கு மனிதனில்லையா

உளவியல் மாற்றமும்
பண்பாட்டு ஏற்றமும்
பொருளாதாரச் சமச்சீரும்
சமூகத்தைச் சமத்துவாக்கும்

அதுவரை
வெறுப்பவனை நேசிக்கச் சொல்லும்
வேதங்களை ஒதுக்கிடு
வேரறுக்கப் போராடு



வெள்ளி, ஜூன் 5

பன்றி கறி







வேணுகோபலனுக்கும்
இராகவேந்திரனுக்கும்
பன்றிக் கறிப் படைத்திட
பதைபதைத்தது கோவை

கண்ணப்பன் நாயனாரானார்
ஹரி என்கிற
ராம் பிரகாஷ் நாயனாராவதை
இந்துக்கள் தடுத்து விட்டனர்

வராக அவதாரமெடுத்து
பூமியைக் காப்பாற்ற
ஆயிரமாண்டுகள் போர் செய்து
அசுரனை வென்றவர்

ஐந்து மணி நேரத்தில்
மறைகாணியில்(CCTv)
படையிலிட்டவனைக் கண்டுபிடிக்க
மலைத்து நிற்கிறார்

பகவான் மலைக்கலாம்
பலரறியப் படையிலிட்டால்
பாரத் ரத்னா
பட்டம் அளித்திருக்கலாம்

யாருமறியாததால்
இஸ்லாமியர் கலங்கினர்
ஆட்டுக் கறிக்கே
அக்லக் அல்லாவிடம் சென்றதனால்

நன்றிகள்
நகர காவல் ஆணையருக்கு
சொன்னது இஸ்லாமியர்களா
நாம் மனிதர்கள்







தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...