செவ்வாய், ஜூலை 24

மண்சோறுண்டால் குழந்தை



தாயென்றாய்
தாரமென்றாய்
தெய்வமென்றாய்
பெண்ணை

தாரம்
தாயாக
தின்ன வைத்தாய்
மண்ணை

கரு உருவாக
காதல் வேண்டும்
அல்ல
சோதனைக்குழாய் வேண்டும்

மண்சோறு தின்றால்
மகப்பேறு கிடைக்குமா
மலடி பட்டம்தான்
மாயமாகி போகுமா

பரிசுத்த ஆவியும்
அரகரனின் விந்தும்
ஆகமப் படி
ஆங்கொரு குழந்தையாகலாம்

கையை பின்கட்டி
கடவுள் நம்பிக்கையென
நாய் போல் உண்டால்
நாளையே குழந்தை கிட்டுமா

அவநம்பிக்கையும்
அஞ்ஞானத்தையும் - நீக்கிட
அங்கு பிறக்கும்
   புதியதொரு வழி

ஆம்
செய்ற்கை முறை
வாடகைத் தாய்
தத்துப்பிள்ளை
என எண்ணுங்கள்








அகலிகை

அகலிகை, சீதை, திரௌபதி, தாரை, மண்டோதரி - பஞ்ச கன்னியரென மகாபாரதம் உரைக்க அவர்களில் அகலிகை கௌதம ரிஷியின் மனைக் கிழத்தி வால்மீகி, கம்பன், ...