திங்கள், நவம்பர் 24

ஒரு சொல் கூறு


தத்தையே
தனித்திருக்கும் எந்தன்
பிணி நீக்கும் – ஒரு
சொல் கூறு

பஞ்சவர்ண கிளியே
பலசொல் அறிவாய்
பாவையான் மகிழ – ஒரு
சொல் கூறு

அன்னம் இணையோடு
என்ன பெருமிதம் பார்
எனினும் தத்தையே– ஒரு
சொல் கூறு

அலைபேசியோ
தொலைபேசியோ
அடியவள் வேண்டுவது
ஒரு சொல்

“ஸ்கைப்” பில்
“லைப்பை” ஓட்டும்
“வைப்” யான் வேண்டுவது
ஒரு சொல்

ஆற்றங் கரையில்
பெண்மான் துயில – ஆண்
கண்விழித்து காவலிருக்கு
அதனால் யான் வேண்டுவது

“வருவார்” இன்று
அருகிருப்பார் என
உவகை யூட்டும் – ஒரு
சொல் கூறு

கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...