வியாழன், செப்டம்பர் 29

புதியதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால்

கடந்த ஆகஸ்ட் 2011 ல் பங்கு சந்தையில் பட்டிலிடப்பட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3/4 வீழ்ச்சியடைந்து சிறு முதலீளிட்டார்களை திவாலாக்கியுள்ளது.

ஐபிஓ எனப்படும் (initial public offer) மூலம் நிறுவனங்கள் பொதுமக்களிடம் நிதி திரட்டுகின்றன.  முன்பெல்லாம் ரூ.100 கோடி முதல் ரூ.1000 கோடி கடன் என்றால் IDBI, IFCI, IIB, ICICI,UTI, LIC, HUDCO,TDB இப்படிப்பட்ட நிறுவனங்களிடம் கடன் பெற்று வந்த நிறுவனங்கள்,  தற்போது அதாவது புதிய பொருளாதார கொள்கை அமலுக்கு வந்தவுடன், IPO மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

மேற்கண்ட நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், ஆயிரதெட்டு ஆவணங்கள், ஈட்டுறுதியாக அசையா சொத்துக்கள், தனிப்பட்ட ஈட்டுறுதி ஆகியவகளை அளிக்க வேண்டும்.   இவைகளிலிருந்து தப்பிக்கதான் இந்த IPO.

பங்கு சந்தையில் நேரடியாக இறங்க முடியுமா என்றால் அதற்கும் ஆயிரதெட்டு நடைமுறைகள்.   வட்டியில்லா கடன் என்பதால் அதை பின்பற்ற தயங்குவதில்லை நிறுவனங்கள்.  முதலீட்டாளனை பொறுத்தவரை சரியில்லை என்றால் நட்டத்திலும் விற்று விட்டு சென்று விடுவான். கேள்வி கேட்க ஆள்ளில்லை.

பங்கு மதிப்பை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அதிகமாக, பொய்யாக இட்டுகட்டி நிர்ணயம் செய்கின்றன.  பங்கு வெளியீடு பட்டியலிடப்பட்ட நான்கைந்து நாட்களுக்குள் நிறுவனங்கள் தன் பங்கில் சிலபகுதியை விற்று ரூ.1970 கோடி பார்த்துள்ளனர்.

பார்த்தீர்களா இவர்களுடைய நோக்கத்தை, நிதி திரட்டுவது என்பது நிறுவனத்தை நடத்த அல்ல.  சிறு முதலீட்டாளர்களை கொள்ளையடிக்க

இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் முடிய ரூ.5947 கோடி37 வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 35 வெளியீடுகள் மூலம் ரூ.12606 கோடி திரட்டப்பட்டது. தற்போது வெளியான 7 வெளியீடுகள் தன்மதிப்பில் 50%  மேல் இழந்து விட்டது.

அப்படிதான் நடந்துள்ளது தற்போது பங்கு வெளியிட்ட கீழ்கண்டுள்ள நிறுவனங்களின் நிலை.


ஏமாறுபவன் இருக்கும் போது ஏமாற்றிக் கொண்டிருப்பவன் புது உத்திகளை கண்டு பிடிப்பான்.  உடனடி பணக்காரன் ஆக நினைப்பவன் உள்ளதையும் இழப்பான், உயரவும் பறப்பான்


           

காரோட்டினால் கசையடி

ஜெத்தாவில் முஸ்லிம் பெண்ணொருவர் காரோட்டியதால் பொதுவிடத்தில் 10 கசையடி மூலம் தண்டிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சியமா ஜஸ்தினய்யா,  இதுபோன்ற தண்டனைக்கு இன்னும் இரு பெண்கள் காத்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்நாட்ரசர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்து ஜனநாயவாதியாக காட்சியளித்தார்.   என்ன செய்வது

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு

உலகவரைபடத்தில் குஜராத்

அம்பானி புகழாரம் சூட்டுகிறார் மோடிக்கு, ஆம் அரசு சொத்துகளை கொள்ளையடிப்பவன், ஆளுபவனை ஆலிங்கனம் செய்து கொள்கிறான்.
அவனும் ஜாம் நகரில் ஒரு பெட்ரோலியப் பல்கலைகழகம் போன்று அகமதாபாத்தில் ஏற்படுத்த வேண்டுமென்கிறான்.  இருவரும் ஊருக்காக உழைப்பவர்கள்.  அதனால் கோரிக்கைகள் வெளிபடையாகவே இருக்கிறது.

ஜாம் நகர் மொத்தமும் இவர்கள் குத்தகை ஏடுத்தது போதாது வா அகமதாபாத் என்கிறார் முதல்வர்.  அவனுடைய தொழிலுக்கு அவன் பல்கலைகழகம் நடத்துகிறான். எத்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு என்றொரு குரல்.  அம்பானியை பழிப்பதா என்றொரு குரல்.

ஊர் சொத்தை உலையில் போடுபவனும், ஊரையே கொளுத்தி பதவிக்கு வந்தவனும் சொரிந்து கொள்கிறார்கள்.

வேடிக்கை பார் பொதுஜனம்

நிர்வாணம்

நேற்றிரவு 9 மணியளவில் லஸ் சந்திப்பில் ஓர் ஆண்  நிர்வாணமாக நடந்து செல்கிறார்.  நான் கூட ஜைனத் துறவியாயிருக்கும் என நினைத்து அமைதியாய் இருந்தேன்.  ஒருபுறத்திலிருந்து மறுபுறம் சென்றவுடன் கையில் சுருட்டி வைத்திருந்த வேஷ்டியை கட்டிக் கொள்கிறார்.

என்னவென்று சொல்வது இந் நடவடிக்கையை

இன்று காலை தினத்தந்தியில் ஒரு செய்தி

சோதிடன் பேச்சை நம்பி, இளம் பெண் பல்லாவரம் ரோட்டில் நிர்வாணமாக நடந்தாள் என்று.  காதலன் வேறொரு திருமணம் செய்து கொண்டான்.  அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஆவல்.  சோதிடன் 10 கோயிலை நிர்வாணமாக வலம் வந்தால் காதலன் கைவசமாவான் என்று சொல்கிறான்.

பேதை நம்பி, சொந்த ஊரில் செய்தால் அசிங்கம் என்றெண்ணி பல்லாவரத்தில்10வது கோயில் சுற்றும் போது போலிஸிடம் மாட்டிக் கொண்டாள்.  மன்னிக்கவும் அவர்கள் சேலை கொடுத்து நல்லபடியாக நடத்தியதாக செய்தி சொல்கிறது.

மன பிறழ்வு

அல்லது நினைத்ததை அடைய எதையும் செய்யலாம்

விடை கிட்டுமா இவர்களுக்கு




புதன், செப்டம்பர் 28

பதவி

பல கட்சி இருக்கும் ஊரிலே கூட்டணி இல்லை,
பேராசைதான் காரணம்

ஒவ்வொரு கட்சிகாரன் இன்னும் சில தனித்துவங்கள்
இத்தனை பேரும் சந்திக்கும் தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்

பதவி கிடைக்க பலவகை முயற்சி
ஒருவர் பேசிக் கொண்டார்
நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு
15 லட்சம் செலவமாகுமென்று

எத்தனை லட்சம் சம்பாதிக்க வழியிருந்தால்
இத்தனை லட்சம் செலவு செய்ய முயற்சிப்பர்
அதுவும் பலமுனை போட்டியில்

எத்தனை பேர் எதை இழக்கப் போகிறார்கள்

அதுசரி அவர்கள் போட்டியில் இழக்கிறார்கள்

நாம்

இழப்பது........................

செவ்வாய், செப்டம்பர் 27

அக்காவின் அதிகாரம்

அக்கா மம்தா இன்று திருவாய் மலர்ந்துள்ளார், மாவோயிஸ்ட்டுகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது உயிர்களை கொல்ல...........

நேற்றுவரை மாவோயிஸ்ட்களை அதிகம் விமர்சிக்காதவர், அதிகாரத்தில் அமர்ந்தவுடன் பேச்சும் மாறிவிட்டது.

அதுசரி இந்த ராணுவம்,காவல் துறை செய்த கொலைகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

அக்கா கொடுப்பார் போல் தெரிகிறது அதனால்தான் குதிக்கிறார்


சனி, செப்டம்பர் 17

நீதி

கல்வி கட்டணம் அல்லாது கூடுதல் கட்டணமாக ரூ. ஒரு லட்சம் கேட்க அவரால் செலுத்த இயலவில்லை அதனால் தேர்வு ஏழுத அனுமதிக்க வில்லை.  உயர்நீதிமன்றம் செல்கிறார்.  தேர்வு எழுத அனுமதிக்க உத்திரவிடுகிறது.

ஆனால் மறுமுறையும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை குற்றமிழைத்தார் என்று நீதிமன்றத்தை அணுக நிவாரணம் கல்வி நிறுவனத்திற்கு அபராதம் ரூ,15000.

ஆம்

கல்வி கட்டணங்கள் முதலாளிக்கு,
கல்வி காசுள்ளவனுக்கு

நாமெல்லாம் பிச்சையிடு என்று
வலையில் எழுதுவோம்
நாலுபேர் படிக்க
நாடு கடந்து பணம் அனுப்புவர்
நமது கடமை முடிந்தது
ஆத்ம திருப்தி

இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை இழுத்து மூடினால் என்ன?

ஜனநாயக நாட்டில் ரூ,15000 அபராதமே சரியான வழி

மூடுவது தீவிரவாதம்

வாழ்க ஜனநாயகம்

புதன், செப்டம்பர் 14

நாடாத்தி

நேற்று நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், வயது 35 க்குள் இருக்கும். இதுவா முக்கியம்.  அவர் சிறுவயதாக (10-12) இருக்கும் போது உறவுக்காரர் நாடாத்தி உள்ளே வராதே என்று திட்டி அழ வைப்பாராம்.  இத்தனைக்கும் அவர் அந்த சாதியை சேர்ந்தவர் அல்ல.

எத்தனையோ செய்திகள், நாடாத்திகள் மாராப்பு சேலை போராட்டம் அந்த மாவட்டத்தில்தான் நடைபெற்றது.  இந்த சாதியை சேர்ந்த ஆண்கள் செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு அணிய கூடாது இத்தனை கட்டுப்பாடுகள் 80 களில் இறுதி வரை

தன் சாதிக்காரியை திட்ட அவர்கள் மனதில் மட்டமாக  உள்ள சாதியின் பெயரை சொல்லி திட்டிக் கொள்வதில் உள்ள திருப்தி, அதில் பாதிக்கபடும் மனம்........?

இன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை.  நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது.  அவர்களிலும் பாகுபாடு.

மனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா?


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்

கிரீஸ் நாட்டின் பொருளாதார தடுமாற்றத்தால் பிரான்ஸ் நாட்டின் வங்கி திவலாகிறது.  ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் அனைத்து ஆட்குறைப்பு செய்கிறது.  RBS, UBS, Barclays, HSBC and Credit Suisse ஆகிய வங்கிகளில் இந்த ஆண்டு மத்தி வரை70000 நபர்கள் பணி இழந்துள்ளனர்.


என்ன இவர்கள் அனைவரும் கிரீஸ் நாட்டிற்கு உழைத்தார்களா அல்ல தங்கள் நாட்டிற்கு உழைத்தார்களா? அல்ல கிரீஸ் நாட்டை சுரண்டினார்களா?


அமெரிக்க டாலர் ஆட்டம் கண்டால் இந்தியாவில் தங்கம் விலை தாறுமாறா ஏறுது

வெங்காயம், எங்கே என்ன நடந்தால் என்ன நடக்கும் என எந்த பாமரனுக்கும் புரிய போவதில்லை





தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...