புதன், மார்ச் 25

கடவுள்




கண்ணப்பனின் பக்தியை சோதிக்க
கண்ணில் இரத்தம் வடித்தவனே
கண்டத்தில் ஆலகாலம் நிறுத்தியவனே
என்னப்பனே எங்களுக்கு கதவடைக்காதே

உலகளந்த வாமன வடிவமே
உலகாளும் மாபலி கொரோனவை
மூன்றடி எடுத்து வைத்தே
மன்றாடும் மக்களை காப்பாற்று

பெண்ணால் பிறக்காத முருகனே
உன்னால் மடிந்தவன் சூரனே
ஆறு முகத்தில் கொரோனாவா
ஆறுகால உணவும் அரோகராவா


மகிசா சூரனல்ல - மக்களம்மா
மரணம் கொரோனாவால் வேண்டாம்மம்மா
மகேசுவரனின் வரமும் இல்லையம்மா
மலைத்தே கதவடைத்துக்  கொள்ளாதேம்மா







நலம் வாழ வேண்டுகிறேன்



கொரானவை துரத்த
கூட்டம் போடாதே

காற்றில் பரவுவதால்
கண்ட இடம் சுற்றாதே

வெளிநாட்டிலிருந்து வந்தவனை
வலுக்கட்டாயமாக பார்க்காதே

வதந்திகளை பரப்பாதே
"வாட்சப்பை" நம்பாதே

ஆகச் சிறந்த மருந்தை
ஆங்காங்கே தேடாதே

அறிவியல் அளிக்கும்வரை
அமைதியாய் கவனித்திரு

மரணத்தை தள்ளிபோட
மனிதனாய் நடந்துகொள்

ஏனெனில் பாசக்கயிறு
கொரோனாகவும் இருக்கலாம்

சனி, மார்ச் 14

கரோனா பங்கு






15 இலட்சம் கோடிகள்
பங்கு சந்தையில் இழப்பு
கரடி கொண்டு போனதோ
மாடால் மீட்க முடியாதோ

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தில்
யாருடைய பணம்
எங்கே போனது

இரத்த வெள்ளமென
பரிசுத்த பத்திரிகைகள்
பாடம் போதிக்க
பாவம் மக்கள்

காரணங்கள்
கரோனா வைரஸ்
யெஸ் வங்கி திவால்
அரசும் பத்திரிக்கையும் வாந்தியெடுத்தவை

ஆசிய பணக்காரன் ஜாக்-மா
அம்பானியின் பட்டத்தை பறிக்க
கரோனா காரணமா
கார்ப்பரேட் ஊழல் நாடகமா

வீழ்ந்த பொருளாதாரத்தின்
நீட்சி இதுவென்றும்
வேலைவாய்ப்பு முடங்கியதின்
தொடர்ச்சி என கொள்ளடா

பங்கு ஈவுக்கு
ஏங்கி கிடப்பவர்களே
ஏப்ரலில் ஏமாற - இதுவொரு
முன்னோட்டமென புரிந்து கொள்ளடா

ஞாயிறு, மார்ச் 1

இலக்கணப் பிழை






கற்றலில் கரைகண்டது
  கண்ணுற்றா கற்சிலை வடித்தா
அற்றை தினத்தில்
  அறமற்று காணிக்கை கேட்டதா
சற்றேனும் வெட்கமின்றி
   சங்கறுக்க கற்றது அருச்சுனனா
பட்டென்று வெட்டி
   படைக்கப் பெற்றவன் ஏகலைவனா

கேட்டதும் கொடுத்தவன்
   கற்றலில் சிறந்த மாணவனா
கேட்டும் கொடுக்காதவன்
   கற்பித்தலுக்கு இலக்கணம் ஆனவனா
சூட்சம வெற்றிக்கு
   சுற்றம் பார்த்தல் பிழையே
ஆட்சேபனை ஏதுமில்லை
   அசுவத்தமா ஹதமென்பதும் கலையே

மாயக் காதல்



அடுத்தடுத்த அலைபோல
  அடியே நினைவுகள்
படுத்துறங்க பகற்கனவில்
  பாவையுன் பாவனைகள்
தடுத்தாட் கொள்ள
  தேவனும் வரவில்லை
நடந்ததை மறந்திட
  நன்நெஞ்சை வேண்டுகிறேன்

பூஞ்சோலை ஏற்காட்டில்
  பாப்புனைந்த காதையும்
தஞ்சையில் தேடிய
  தாளராக கீர்த்தனையும்
நெஞ்சில் வாராதிருக்க
  நித்தமும் வேண்டுகிறேன்
அஞ்ஞானம் போலும்
  அகலாது வாடுகிறேன்

நாளெல்லாம் பேசியது
  நேற்றோடு முடிந்தது
நானே பேசுவது
  ஞானக் கிறுக்கானது
தாளெல்லாம் தமிழானது
   நாளமும் கொதிப்பானது
மாளாத அன்பிலே
   மாயத்தை வெல்வேனோ

இசையூற்று





என்னாசை கேளடா
  ஏதோதோ இராகம் ஏனடா
கண்ணசைவை பாரடா
  காதலினின் இராகத்தை இயற்றடா
பண்ணிசை பட்டியலில்
  பாவையிடம் நரம்பிசை அறங்கேற்று
திண்டாடி போகும்வரை
   தேகத்தில் பொங்கட்டும் இசையூற்று

மாடமாளிகை வேண்டாம்
    மச்சான் மனசுதான் வேண்டும்
காடுகழனி வேண்டாம்
    கடைசி வரை கைப்பிடித்து வரவேண்டும்
ஜாடமாடையா ஊருலகம்
     வாய்வலிக்க பேசிக் கொள்ளட்டுமே
கூடிக்களிக்க வாருமய்யா

      குதுகலம் சாமம் வரை நீளட்டுமே

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...