ஞாயிறு, நவம்பர் 13
பிரிவின் வலி
திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி
நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ
அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்
தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மரணமா மதங்களுக்கு
நிலையானது ஏதுமில்லை ஆன்மா இல்லவே இல்லை துன்பம் உண்டு தோன்றியது மாறும்/மறையும் எனக்கு மீறிய சக்தி எதுவெனக் கேள் ஆம். உண்மையை உரக்கச் சொன்னால்...

-
நிலையானது ஏதுமில்லை ஆன்மா இல்லவே இல்லை துன்பம் உண்டு தோன்றியது மாறும்/மறையும் எனக்கு மீறிய சக்தி எதுவெனக் கேள் ஆம். உண்மையை உரக்கச் சொன்னால்...
-
கண்கள் கனிய காதல் அரும்பியது கைப் பிடிக்க கழுத்து அறுப்பட்டது விரும்பிய உள்ளங்கள் வீம்பான பெற்றோர்கள் விலையானது உயிர்கள் விளையுமோ அன்பு வி...
-
ஆபிரகாமின் புதல்வர்கள் இஸ்ரவேலரின் குழந்தைகள் கடவுளை ஒளியாய் கண்டவர்கள் யூதர்களாம் யூதனாய் பிறந்தவன் இறைதூதன் என்றே வ...
-
பாரதமாம் பஞ்சப் பாண்டவர்களாம் பக்தி இலக்கியமாம் பாராய்!! கதை கேளாய்!! மானிரண்டு மையலிலே மன்னன் பாண்டுவோ காட்டில் வேட்டையிலே கொன்றனன் ஆண்...
-
அன்றாடங் காய்ச்சியாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு அவ்வீதிவழி – தள்ளுவண்டியில் காய்கறி விற்போம் அகிலஉலகப் பணக்காரன் அம்பானி அன்றாடங்காய்ச்சியா அ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக