சனி, பிப்ரவரி 11
பசுத் தழுவுதல்
காதலிப்போர்
கண்ணோடு கண்
காணும் நாளா
பிப்ரவரி 14
வேதத்தை மீட்டெடுக்க
வாஞ்சையோடு
பசுவைக் கட்டியணைக்க
பிப்ரவரி பதினாங்கா
காமதேனு என
கட்டிப் பிடிப்பாயா
கோமாதா என
கூம்பிட்டு நிற்பாயா
பசுவைத் தழுவு
அசுமேத யாகத்தில்
வேதமுரைத்ததை
வேட்கையோடுச் செயல்படுத்து
யாக முடிவில்
தசரதப் பத்தினிகளுக்கு
புத்திரப் பாக்கியம்
பிப்ரவரி 14 ல் உங்களுக்கு
உழைப்பைப் போற்றும்
உன்னத மரபில்
உடனுழைத்த மாட்டை
உயர்த்திப் பிடிக்கும் தமிழனே
வேத மரபை மீட்க
பசுவைத் தேடிக் கொண்டிருப்பாயா
காதல் உயிரினத்தின்
உன்னதமென போதிப்பாயா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பங்குச் சந்தை
யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...
-
ஏழெட்டுப் பொருத்தம் எனக்கும் அவனுக்கும் வாழட்டும் என்றே வழியனுப்பி வைத்தது பாழும் கிணரென்று பாதகத்தி அறிந்தாலும் சூழல் இல்லையே சுற்றத்திடம்...
-
கூத்துக் கட்டியவன் குறைகளை களைவதாய் கூட்டத்திடையே சூளுரைத்தான் வசனங்கள் வசீகரிக்க விண்ணதிர கைத்தட்டல் மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல கனவு வளர்த...
-
ரூ,1500 ரூ. 5000 ஆனது விலைவாசி அல்ல 28 டாலர் 72 டாலராக மாறியது இலாபமல்ல ரூ.1500 மின்சார கட்டணமல்ல 72 டாலர் நிலக்கரியின் விலையுமல்ல ரூ.6183...
-
பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன் கனியுதட்டின் காயத்திற்கு கப்பம்கட்டப் போகிறேன் இனிதென்று வாங்கியதை இளஞ்சூட்டில் தருவாயோ? நனியெ...
-
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனானதால் முப்பாட்டன் முருகனுக்கு முத்தமிழ் மாநாடு சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும் அக்கக்காய் ஆய்ந்த ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக