சனி, பிப்ரவரி 11
பசுத் தழுவுதல்
காதலிப்போர்
கண்ணோடு கண்
காணும் நாளா
பிப்ரவரி 14
வேதத்தை மீட்டெடுக்க
வாஞ்சையோடு
பசுவைக் கட்டியணைக்க
பிப்ரவரி பதினாங்கா
காமதேனு என
கட்டிப் பிடிப்பாயா
கோமாதா என
கூம்பிட்டு நிற்பாயா
பசுவைத் தழுவு
அசுமேத யாகத்தில்
வேதமுரைத்ததை
வேட்கையோடுச் செயல்படுத்து
யாக முடிவில்
தசரதப் பத்தினிகளுக்கு
புத்திரப் பாக்கியம்
பிப்ரவரி 14 ல் உங்களுக்கு
உழைப்பைப் போற்றும்
உன்னத மரபில்
உடனுழைத்த மாட்டை
உயர்த்திப் பிடிக்கும் தமிழனே
வேத மரபை மீட்க
பசுவைத் தேடிக் கொண்டிருப்பாயா
காதல் உயிரினத்தின்
உன்னதமென போதிப்பாயா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யார் எவரோ?!
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கடந்த ஞாயிறு அடர்ந்த முடிதிருத்த அகவை ஏழுகொண்ட அருணனை அழைத்துச் சென்றேன் அருகிலிருந்த அங்காடியில் வண்ண மீன்கள் காதல் பறவைகள...
-
நியூட்டனின் 3வது விதிப்படி எனை ஈர்க்கும் எதிர்வினையே திக்குத் தெரியாத பரந்த வெளியில் திசைதனை காட்டுவது கன்னி உன் கண்களே காந்த ஊசிபோல் ...
-
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி ஆம் உங்களுக்கு புரட்சி தெரியும் வச்சாத்தியும் மகாமக குளமும் பரமக்குடியும் நேற்றின்றைய புரட்சிகள் லிபியாவ...
-
பன்மொழி புலமை பக்தனுக்கு உண்டா ஏழேழு உலகை இரட்சித்து காக்கும் பரமனுக்கும் உண்டா அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக