படைத்தவனை
பார்க்க
அனுமதி வேண்டிட,
பாராமுகமாய்
இருந்ததால்
பஞ்சாயத்து.
இயல்புகளுக்கு
முரணாக
இறைவன்
இருப்பதால்,
இப்
பெண்களை
18-ஆம்
படியில் பார்க்க விரும்பவில்லை.
அரசியல்
சாசனம்
அர்ச்சகர்
ஆவதற்கு
அனுமதி
25(2)(பி)
கீழ்
வழங்கினாலும்,
அதற்கும்
தடை விதித்திட.
நிரந்தர
பிரம்மச்சாரியின்
நிஷ்டை
கலைந்திடுமோ,
நீள்விழி
முலையுடைய மாதை
பட்டினத்தான்
கண்டது போல்.
ஜெயமாலாவின்
வாக்குமூலம்
ஜெயிக்கவில்லை
என்றாலும்,
மனோரமா,
சுதா
சந்திரனுக்கு
அபராதம்
விதித்து காத்தனர்.
தீண்ட அனுமதி
இல்லை எனில்,
தீர்ப்பு
எழுதுவதற்கு முன்
தீண்டித்தான்
பார்ப்போம்—
தீர்ப்புகள்
திருத்தப்பட?!!
வாதம் தொடரும்
அ. வேல்முருகன்