மாறிடுமோ நடந்தைவைகள்
மன்னிப்பதால்
மறந்திடுவோமா
கொட்டிய வார்த்தைகள்
தேளின் வலியாக - சுண்ணாம்பு
விஷத்தை முறிக்குமோ
காயமோ வடுக்களோ
கண்களில் படும்போது
வலிகள் வந்துதான் போகும்
மனதும் மௌனமாகும்
கடந்து செல்லக்
கடினமாகும்
பகை வளர்த்து
பழியோடு வாழலாமா?
பண்பல்லவென மாறலாமா?
மறப்போம் மன்னிப்போம்
மனதிற்கல்ல
மாறாதத் தேவைக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக