செவ்வாய், ஜூன் 10

நோய்

 










நோக்கும் கண்களால்
நோயைத் தந்தாய்
நீக்கும் மருத்துவம்
நீயேதான் என்றாய்
தூக்கம் கெடுத்து
துவளச் செய்தாய்
தாக்கும் நினைவுகளால்
தவிக்கவே விட்டாய்

மறதி வேண்டுமென
மனதிடம் கேட்டேன்
துறவுக் கொண்டாலும்
துரத்தும் என்றது
உறவு என்பது
உயிருள்ள வரைதான்
இறவுச் சொல்லும்
இனியில்லை வதைதான்

நினைவுகள் இன்பமென
நியதி ஏதுமில்லை
புனைவுகள் என்றாலும்
புலன்கள் அறிவதில்லை
தினையளவு வெறுப்பு
தீர்ப்பு அளிப்பதில்லை
அனைத்தும் புரிந்தாலும்
அன்புத் தோற்பதில்லை

                                   அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...