செவ்வாய், ஜூலை 17

இந்தியனா


மனிதனாய் இருக்காதே
இந்தியனாயிரு

மனிதன்தான் என்றால் - நீ
தீவிரவாதி

மக்களை நேசிப்பவனா - நீ
மாவோயிஸ்டு

அரசுக்கு எதிராக கேள்வியா - நீ
நக்ஸலைட்

உனது மதம்
உனக்கான தேசத்தை உணர்த்தும்

ஜோதியில் ஐக்கியமாயிரு
தேச பக்தனாவாய்

சாதியில் இணைந்திரு
சனாதனம் காத்தவனாவாய்

எந்த சாமிய வணங்கினாலும்
இந்துவென அறியப்படுவாய்

ஆயிரம் வழியென்றாலும்
அரசியலமைப்பு தீர்மாணிக்கும்

தமிழை நேசித்தால்
தரங் கெட்டவனாவாய்

எதிலும் சேராதவனா
எங்கள் விரோதி

மனிதா?!  மனிதனாய் நீயிருந்தால்
இந்தியனில்லை

ஞாயிறு, ஜூலை 15

போ...... போயிட்டேயிரு

ஆயிரம் நடக்கும்
அவலம் உனக்கா
அதனாலென்ன
அடுத்த வேலையை பார்

ஏமாந்தாயா?
ஏமாற்றப் பட்டாயா?
எதுவாயினும்
என்ன செய்து விடுவாய்

நேர்மை, உரிமை
நேற்று இன்று நாளை
என்றும் இல்லை -ஆக
நடப்பதை ஏற்றுக் கொள்

அதிகாரம் அவர்களிடம்
பொதிக் கழுதைகள்
சுமக்க மட்டுமே
சொடக்கு போட்டால் ........ சினிமா

பாவ பரிகாரமாய்
பாராள்பவரின் திருபலிகள்
பதிய வைப்பதற்கே
மீண்டும் உயிர்தெழாதிருக்கவும்

காடுகள் மலைகள்
மடுவூம் அணைகளும்
காக்கும் மக்களுக்கா
காசாக்கும் மன்னர்களுக்கா

வரிச் செலவுகள்
எட்டு வழியாயிருக்கலாம்
எந்தவழி   சரியென்பதும்
எமது வசதி

அதிகாரம் எதுவென
அறிந்த மக்களுக்கு
அருஞ்சொற் அகராதி
அச்சமென்றே சொல்லும்

அடக்குமுறை  - அரச
அச்சத்தின் வெளிப்பாடு
வெடிக்கும் போராட்டங்கள்
வழிகாட்டும் விடிவெள்ளிகள்


திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...