வெள்ளி, ஏப்ரல் 3

போடுங்கம்மா ஓட்டு









ஜனநாயகத் திருவிழா
ஜனநாயகன் திரைப்படம்
சதிகளால் வரவில்லை என
சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள்

வேட்பாளர் பட்டியல்
வெளியிட முடியாத கட்சிகள்
வெற்றிப் பெற்றுவிடுவதாய்
கனவு காண்கிறார்கள்

மார்க்சிய-லெனினிய குழுக்கள்
மதவாதிகளை எதிர்கொள்ளாது
திராவிடத்தை
தழுவிக் கொண்டனர்

யார் அழைப்பார்களென
யௌவன வேடமிட்டு
காத்திருந்து காத்திருந்து
யாசகம் கேட்கிறார்கள்

துரோகிகள் என தூற்றிய
துடைப்பக் கட்டைகள்
பட்டுக் குஞ்சம் கட்டி
பல்லக்கில் செல்கிறார்கள்

வளர்ச்சிக்கேற்ப
வழங்கவில்லை இடங்களென
வருத்தங்களிருந்தாலும்
வலதுசாரிகள் வரக் கூடாதென்பதற்காக

இடதுசாரிகளின் இடிமுழக்கம்
வெளியே தெரியாதவாறும்
மாவளவனின் வருத்தத்தோடும்
மையத்தின் தியாகத்தோடும்

கொள்கைக் கூட்டணியென்ற
கோட்பாட்டை மறந்து
ஆர்.எஸ்.எஸ். அடிவருடியை
இணைத்தொரு கூட்டணி

அதிகாரம் வேண்டுமென
அவர்கள் டெல்லிக்கு
ஆவலாய் பறந்து
அமைத்தொரு கூட்டணி

அனாதைகள் இணைந்து
அவர்களிருப்பை
அகிலம் கவனிக்க
அமைந்தது மற்றொரு கூட்டணி

எல்லோரிடமும் பேசி
எங்கும் பேரம் படியாததால்
யாரும் வேண்டாமென
எல்லா இடங்களிலும் போட்டி

இந்தத் திருவிழாவில்
செய்தி ஊடகங்கள்
சில்லறை பார்ப்பதற்காக
சித்திரங்களை காட்டுகின்றன

எல்லோரும் இலவசமென
எழுப்பும் கூவல்களில்
ஏனோ மறந்தோம்
ஏறும் விலைவாசியை

வாக்கெனும் வாய்கரிசியை
வழங்கிய பின்
நேட்டோ போல
நோட்டாவும் உதவாது

ஆக, என்ன செய்யலாம்
ஊரை நிர்வாகம் செய்பவன்
ஊழல் நிகழ்த்துவானெனில்
உடனே நீக்கிட அதிகாரம் கேள்!!



அ. வேல்முருகன்













கருத்துகள் இல்லை:

உச்சநீதிக்கு -வாதம் -1

  படைத்தவனை பார்க்க அனுமதி வேண்டிட , பாராமுகமாய் இருந்ததால் பஞ்சாயத்து . இயல்புகளுக்கு முரணாக இறைவன் இருப்பதால் , இப் பெண்களை 18-...